‘நுனிநாக்கில் சரளமான ஆங்கிலம்’…பிச்சை எடுத்துவரும் டி.எஸ்.பி.யின் பட்டதாரி மகன்!

 

‘நுனிநாக்கில் சரளமான ஆங்கிலம்’…பிச்சை எடுத்துவரும்  டி.எஸ்.பி.யின் பட்டதாரி மகன்!

கிரிஜா சங்கர் மிஸ்ரா  தாக்கியதில் ரிக்ஷாக்காரருக்கு முகத்தில் ரத்தம் வழிய ஆரம்பித்துவிட்டது.

ஒடிசா மாநிலம் புரியில் உள்ள ஜெகன் நாதர்  கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.  இங்கு ஏராளமானோர் பிச்சை எடுத்து வாழ்க்கையை  ஓட்டி  வருகின்றனர். இந்நிலையில் கோவில் வாசலில் பிச்சை எடுக்கும்   கிரிஜா சங்கர் மிஸ்ரா இடத்தில் ரிக்ஷாக்காரர் ஒருவர் தனது வாகனத்தை நிறுத்தியுள்ளார். இதனால் இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறில் கிரிஜா சங்கர் மிஸ்ரா  தாக்கியதில் ரிக்ஷாக்காரருக்கு முகத்தில் ரத்தம் வழிய ஆரம்பித்துவிட்டது.

ttn

இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது இருவரும் புகார் கொடுங்கள் உரிய நடவடிக்கை  எடுக்கிறோம் என்று கூறியதையடுத்து பிச்சைக்காரர் கிரிஜா சங்கர் மிஸ்ரா, ஆங்கிலத்தில் சரளமாகத் தனது புகார் மனுவை எழுதினார்.  இதை  போலீசார் ஆச்சரியத்தில் திக்குமுக்காடிப் போயினர்.

ttn

இதன் பின்னர்  கிரிஜா சங்கர் மிஸ்ராவிடம் நடத்திய விசாரணையில் அவர், புவனேஸ்வரை சேர்ந்த ஓய்வுபெற்ற டி.எஸ்.பி.யின் மகன் என்பதும் அவர் பி.டெக்  பட்டதாரி என்றும் தெரியவந்தது. கல்லூரி படிப்பை முடித்த சில ஆண்டுகளிலேயே மனநலம் பாதிக்கப்பட்டதால் அவர் வீட்டை விட்டு வெளியேறி பிச்சை எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து கிரிஜா சங்கர் மிஸ்ராவை அவரது குடும்பத்துடன் சேர்க்கும் வேலையில்  போலீசார் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.