‘நீ மட்டும் தான் தமிழ் தாய் பிள்ளையா? நாங்க என்ன அமெரிக்காரனுக்கு பொறந்தவங்களா’ சீமானை வெளுத்து வாங்கிய நடிகர் லாரன்ஸ்

 

‘நீ மட்டும் தான் தமிழ் தாய் பிள்ளையா? நாங்க என்ன அமெரிக்காரனுக்கு பொறந்தவங்களா’ சீமானை வெளுத்து வாங்கிய நடிகர் லாரன்ஸ்

அரசியலில் நல்ல அரசியல் கெட்ட அரசியல் என்று இருக்கிறது. எல்லோரையும் வரவேற்பது தான் நல்ல அரசியல். அரசியலில் நான் மட்டும் வர வேண்டும் என்பது அரசியல் கிடையாது

நடிகர் ரஜினிகாந்தின் 70-வது பிறந்தநாளான  நேற்று  சென்னை காமராஜ் அரங்கில் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் நடிகை மீனா, கே.எஸ் ரவிகுமார், ராகவா லாரன்ஸ், எழுத்தாளர் கலைஞானம், பி.வாசு, எஸ் பி முத்துராமன் ஆகியோர் கலந்துகொண்டனர். 

ttn

இந்நிலையில் நிகழ்ச்சியைப் பேசிய ராகவா லாரன்ஸ், ‘ என் தலைவனுக்கு 70 வயது என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அவருக்கு இன்னும் 25 வயது மாதிரி தான் இருக்கிறது. வெறிதனம்  என்பது அவருக்கு மட்டுமே பொருந்தும். நான் கமல் சார் போஸ்டரில்  அறியாத வயதில் சாணி அடித்தேன். அது அறியாத வயது. அப்படி பேசியது யார் மனதையாவது காயப்படுத்தி  இருந்தால் மன்னித்து விடுங்கள். கமல் சாரும்  ரஜினி சாரும் எப்போதும் ஒன்றாக இருக்க வேண்டும். அரசியலில் நல்ல அரசியல் கெட்ட அரசியல் என்று இருக்கிறது. எல்லோரையும் வரவேற்பது தான் நல்ல அரசியல். அரசியலில் நான் மட்டும் வர வேண்டும் என்பது அரசியல் கிடையாது’ என்றார். 

ttn

தொடர்ந்து பேசிய அவர், நான் தாம் தமிழ் தாயின் மூத்த பிள்ளை என்று சொல்கிறார்கள். நாங்கள் மட்டும் என்ன, அமெரிக்க காரர்களுக்கு பிறந்தவங்களா? நாங்களும் தமிழ் தாயின் பிள்ளைகள் தான். பெயர் சொல்லி திட்டினா தான் ஆம்பளன்னு சொல்லுவாங்க. பெயர் சொல்லி தான் நான் ஆம்புளைனு நான் நிருபிக்க வேண்டுமா..? உங்கள விட நான் நல்லாவே பேசுவேன். ராயபுரத்தில் பிறந்தவன் தான் நான். எப்படி வேண்டுமானாலும் எனக்கு பேச தெரியும். ஆனா நான் அப்படி  பேச மாட்டேன். ஏன்னா நன் ரஜினி ரசிகன். நீ ஓட்டுக்காக பண்றவன். நாங்க  நாட்டுக்காக பண்றவங்க’ என்றார்.

சமீபகாலமாகச் சீமான் – ராகவா லாரன்ஸ் மத்தியில் வார்த்தை போர் சென்று கொண்டிருக்கும் மாறி மாறி இருவரும் தொடர்ந்து விமர்சித்துக் கொள்வது குறிப்பிடத்தக்கது.