‘நீ பேசலன்னா நான் செத்துடுவேன்’ : வீடியோ காலில் வருங்கால மனைவி கண்முன்னே துடிதுடித்து இறந்த இளைஞர்!

 

‘நீ பேசலன்னா நான் செத்துடுவேன்’ :  வீடியோ காலில்  வருங்கால மனைவி  கண்முன்னே துடிதுடித்து இறந்த இளைஞர்!

இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளனர். கடந்த சில நாட்களாக அந்த பெண் சுரேஷுடம் பேசவில்லை என்று கூறப்படுகிறது.

புதுச்சேரி மாநிலம் காலாப்பட்டு அடுத்த கனகசெட்டிக்குளம் புதுநகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். வழக்கறிஞரான இவருக்கும் கடலூர் மஞ்சக்குப்பத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளனர். கடந்த சில நாட்களாக அந்த பெண் சுரேஷுடம் பேசவில்லை என்று கூறப்படுகிறது.

ttn

 

இந்நிலையில் நேற்றிரவு சுரேஷ் அந்த பெண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் வீடியோ கால் செய்துள்ளார். அப்போது நீ என்னிடம் பேசவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வேன் என்று கூறி மின்விசிறியில் கயிற்றைக் கட்டி நின்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக நாற்காலி விழுந்துள்ளது. இதனால் சுரேஷ் கழுத்து இறுக்கித் துடிதுடித்துள்ளார். 

ttn

இதை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண், அவரின் வீட்டுக்கு போன் செய்து விவரத்தை சொல்ல, அவர்கள் கதவை உடைத்துக்கொண்டு பார்த்த போது  சுரேஷ் தூக்கில்  பிணமாக தொங்கியுள்ளார். இதுகுறித்து போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சுரேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.