நீ என்ன லூசா இல்ல, லூசு மாறி நடிக்கிறியா? : மீராவை வெளுத்து வாங்கிய சாக்ஷி
பிக் பாஸ் 3யின் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது.
சென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடைசி ஆளாக நுழைந்தவர் மீரா மிதுன். இவர் வீட்டில் நுழைந்த நாள் முதல் போட்டியாளர்கள் அனைவரிடமும் சண்டை போட்டு வருகிறார். அது மட்டுமின்றி மற்றவர்கள் சொல்வதைக் காதில் வாங்கி கொள்ளாமல் , பழி போடுவது, பொய் சொல்வது என்று இவர் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
இந்த நிலையில் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. அதில் மீராமிதுன் கேப்டன் சாக்ஷியிடம் தனக்காக ஒரு மீட்டிங் ஏற்பாடு செய்யும்படி கேட்டுள்ளார். அது எதற்காக என்றால் ‘என்னை அனைவரும் தவறாக புரிந்துள்ளனர், எனவே அவர்களிடம் என்னுடைய நிலையை நான் சொல்ல வேண்டும் அதனால் மீட்டிங் ஏற்பாடு செய்தால், அதில் மனம் விட்டு பேசப்போவதாக ‘ தெரிவித்துள்ளார்
மீராமிதுன் பேச்சை நம்பி சாக்ஷி அனைவரிடமும் பேசி ஒரு மீட்டிங் ஏற்பாடு செய்கிறார். ஆனால் மீரா, உடனே ‘இந்த மீட்டிங்கை நான் ஏற்பாடு செய்யச் சொல்லவில்லை , நீயாகத்தான் ஏற்பாடு செய்தாய்’ என்றும் சாக்ஷி பக்கம் திரும்பியுள்ளார்.
#Day23 #Promo3 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/lPMYO3ccvL
— Vijay Television (@vijaytelevision) July 16, 2019
இதனால் கடும் அதிர்ச்சியடைந்த சாக்ஷி, ‘நீ லூசா இல்ல லூசு மாதிரி நடிக்கிறியா? நீ என்ன செஞ்சிட்டு இருக்கேன்னே எனக்கு புரியவில்லை’ என்று கடும் கோபத்துடன் கூறுகிறார். இதனால் மனமுடைந்த மீரா வழக்கம் போல தனது கண்ணீர் நாடகத்தைத் தொடங்கியுள்ளார். ஆனால் இந்த முறை அவருடைய கண்ணீரைத் துடைக்க ஒருத்தர் கூட முன் வரவில்லை.