‘நீ எனக்கு வேண்டும்…உன்னை காதலிக்கிறேன்’ : ஆண் சீடருக்கு லவ் டார்ச்சர் கொடுத்த நித்தியானந்தா; அதிர்ச்சி தரும் பாலியல் புகார்!

 

‘நீ எனக்கு வேண்டும்…உன்னை காதலிக்கிறேன்’ : ஆண்  சீடருக்கு லவ் டார்ச்சர் கொடுத்த நித்தியானந்தா; அதிர்ச்சி தரும் பாலியல் புகார்!

அரைகுறை நிர்வாணப் படத்தை அனுப்பி அந்த இளைஞரை நீ அழைத்துவா என்று கூறி வற்புறுத்தியதாகவும் அந்த பேட்டியில்  தெரிவித்துள்ளார். 

ஆள்கடத்தல், பண மோசடி, பாலியல் புகார்களில்  சிக்கியுள்ள நித்தியானந்தாவைக் குஜராத் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்நிலையில் நித்தியானந்தா மீது ஆண்  பக்தர் ஒருவர் பாலியல் புகார் கூறி பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.

nithi

இதுகுறித்து பிரபல ஊடகத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த 28 வயதான இளைஞர் விஜயகுமார், ஆண்டாள் விவகாரத்தில் சீடர்களுக்கு நித்தியானந்தாவே வைரமுத்துவை ஆபாசமாகப் பேச கூறினார். எனக்கு அவரது பேஸ்புக் மெசஞ்சர் மூலம் பாலியல் தொல்லை கொடுத்தார். அதில், உன்னை என் சோஷியல் மீடியா பிரிவின் தலைவராக்குகிறேன்.  நீ எனக்கு வேண்டும். எனக்கு நீ சேவை செய்யவேண்டும். நீ   சந்நியாசியாக மாறினால் உன் வாழ்வில் நிறைய மாற்றம் ஏற்படும்’ என்று ஆசை வார்த்தைகள் கூறினார். ஒருகட்டத்தில் நான் உன்னை காதலிக்கிறேன் என்று கூறியுள்ள அவர் ஒரு ஆண் மாடலின் அரைகுறை நிர்வாணப் படத்தை அனுப்பி அந்த இளைஞரை நீ அழைத்துவா என்று கூறி வற்புறுத்தியதாகவும் அந்த பேட்டியில்  தெரிவித்துள்ளார். 

ttn

தொடர்ந்து பேசியுள்ள அவர், நான் நித்தியானந்தாவால்  மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். தக்க ஆதாரத்துடன் விரைவில் போலீசில் புகார் அளிக்கவுள்ளேன்’ என்று கூறி கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.