நீலாம்பரியாக நடிக்க முதலில் ஒப்பந்தமானது இவர் தானாம்…கடைசியில் இதனால் பறிபோன வாய்ப்பு!

 

நீலாம்பரியாக நடிக்க முதலில் ஒப்பந்தமானது இவர் தானாம்…கடைசியில் இதனால் பறிபோன வாய்ப்பு!

ரஜினிக்கு சமமாக  பவர்புல்லான கதாபாத்திரமாக நீலாம்பரி கேரக்டர்  அமைக்கப்பட்டிருக்கும். 

இயக்குநர்  கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான திரைப்படம் படையப்பா. 1999ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் சிவாஜி , நடிகை சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், நாசர், செந்தில், ரமேஷ் கண்ணா, ப்ரீத்தா விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ரம்யா கிருஷ்ணன் வீட்டில் வேலைசெய்யும் பெண்ணாக சௌந்தர்யா நடித்திருந்த நிலையில் அவருக்கு அப்படியே நேரெதிராக அசத்தலான  வில்லியாக நீலாம்பரி கேரக்டரில்  ரம்யா கிருஷ்ணன் நடித்திருப்பார்.

ttn

இன்னும் சொல்லப்போனால்  ரம்யா கிருஷ்ணன் கெரியரில் படையப்பா முக்கிய படமாக இருக்கும் என்று சொல்லாம். அந்தளவிற்கு ரஜினிக்கு சமமாக  பவர்புல்லான கதாபாத்திரமாக நீலாம்பரி கேரக்டர்  அமைக்கப்பட்டிருக்கும். 

ttn

இந்நிலையில் படையப்பா படத்தில் முதலில்  நீலாம்பரி  கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை மீனாவை தான் கமிட் செய்தார்களாம். ஆனால்  தமிழில் நட்புக்காக படத்தில் சிம்ரன் சற்று வில்லத்தனமாக நடத்த  ரோலில் மீனா தெலுங்கில் நடித்தார்.

ttn

அதில் கொஞ்சம் கூட வில்லத்தனமாக நடிக்காமல், அப்பாவியாக முகத்தை வைத்து கொண்டு சொதப்பியுள்ளார்.  இதனால் மீனா இதற்கு சரிப்பட்டு வரமாட்டார் என்று நினைத்த ரவிக்குமார், ரம்யா கிருஷ்ணனை நடிக்கவைத்துள்ளார். 

ttn

இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாரின் நம்பிக்கையைக் கொஞ்சமும் வீணடிக்காமல் நீலம்பரி என்ற கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணனை தவிர வேறுயாரும் பொருந்தி இருக்கமாட்டார்கள் என்று சொல்லும் அளவிற்கு வாழ்ந்து காட்டி இருப்பார் ரம்யா கிருஷ்ணன்.