’நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே…’ வெளிநாடு செல்லும் முன் சசிகலாவிடம் அனுமதி பெற்ற எடப்பாடி..!

 

’நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே…’ வெளிநாடு செல்லும் முன் சசிகலாவிடம் அனுமதி பெற்ற எடப்பாடி..!

பாஜகவிற்கும், ஓபிஎஸ் தரப்பிற்கும் இது அதிருப்தியை ஏற்படுத்தியதாகக் கூறுகின்றனர். அதைவிட செய்தியறிந்து தினகரன் படு அப்செட்டில் இருப்பதாக அமமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவுடன் எடப்பாடி தரப்பு தொடர்பில் இருப்பதாக ஏற்கனவே செய்திகள் உண்டு. எடப்பாடியின் தூதர்கள் பலமுறை சசிகலாவை  நேரில் சந்தித்து பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில்,  வெளிநாட்டு பயணம் குறித்த தகவலை கர்நாடக சிறையில் இருக்கும் தனது  மாஜி சின்னம்மாவான சசிகலாவுக்கு பணிவோடு அனுப்பி விட்டுத்தான் போயிருக்கார் எடப்பாடி என்று கூறுகின்றனர்.ttv dhinakaran

இதனால் சசி தரப்பு மகிழ்ச்சியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.  ஆனால், பாஜகவிற்கும், ஓபிஎஸ் தரப்பிற்கும் இது அதிருப்தியை ஏற்படுத்தியதாகக் கூறுகின்றனர். அதைவிட செய்தியறிந்து தினகரன் படு அப்செட்டில் இருப்பதாக அமமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.