நீதிமன்றங்கள் எல்லை மீறுகின்றன… மத்திய அமைச்சர் காட்டம்!!

 

நீதிமன்றங்கள் எல்லை மீறுகின்றன… மத்திய அமைச்சர் காட்டம்!!

உயர் நீதிமன்றங்கள் பொது நல  மனுக்களை பயன்படுத்தி அரசு நிர்வாகத்தில் தலையிடுவதாக மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். 

நீதிமன்றங்கள் எல்லை மீறுகின்றன… மத்திய அமைச்சர் காட்டம்!!

உயர் நீதிமன்றங்கள் பொது நல  மனுக்களை பயன்படுத்தி அரசு நிர்வாகத்தில் தலையிடுவதாக மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். 

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், “நீதித்துறை மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கவும், சட்டத்தை ஒழுங்குபடுத்தவும், நீதிமன்றங்களில் உள் சீர்திருத்தங்கள் அவசியம். நீதிபதிகளின் தீர்ப்பு பொறுப்பு மிகுந்தவையாக இருப்பது அவசியம். இது உயர் நீதிமன்றங்களுக்கு மட்டுமின்றி உச்ச நீதிமன்றத்திற்கும் பொருந்தும்.

சில நீதிபதிகள் சர்ச்சைக்குரிய தீர்ப்புகளை தங்கள் ஓய்வு நாளுக்கு முன்பு வழங்குகிவிட்டு, ஓய்வுக்கு பின்னர் தொலைக்காட்சி விவாதங்களில் அமர்ந்து தாங்கள் அளித்த தீர்ப்புகளை நியாயப்படுத்தி பேசி வருகின்றனர். மாநில அரசுகளுக்கு இணையான தனி அரசாங்கம் நடத்த உயர் நீதிமன்றங்கள் பொதுநல மனுக்களை  பயன்படுத்தி  கொள்கின்றனர்” என்று கூறினார். 

அந்த நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற தலைமை நீதி ரஞ்சன் கோகோய் உள்ளிட்டோர்  பங்கேற்றனர்.