நீட் தேர்வு விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும்: முக ஸ்டாலின் பேட்டி..

 

நீட் தேர்வு விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும்: முக ஸ்டாலின் பேட்டி..

அனிதாவின் மரணம் முதல் இந்த ஆள்மாறாட்ட முறைகேடு வரை நீட் தேர்வு தமிழக மாணவர்களை ஏமாற்றி வருவதால், நீட் தேர்வைத் தடை செய்ய வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்னால் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

நீட் தேர்வில் தொடர்ந்து ஆள் மாறாட்டம் வழக்குகள் கண்டுபிடிக்கப் படுகின்றன. அனிதாவின் மரணம் முதல் இந்த ஆள்மாறாட்ட முறைகேடு வரை நீட் தேர்வு தமிழக மாணவர்களை ஏமாற்றி வருவதால், நீட் தேர்வைத் தடை செய்ய வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்னால் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

MK Stalin

இதனையடுத்து, இன்று திருவாரூரில் செய்தியாளர்களைச் சந்தித்த முக ஸ்டாலின், நீட் தேர்வில் இதுவரை 50 மாணவர்களுக்கு மேல் ஆள் மாறாட்டம் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது. அதனால், இந்த வழக்கை சிபிசிஐடியில் இருந்து சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

மேலும், நீட் தேர்வில் திமுகவுக்கு உடன்பாடு இல்லை என்றும், நீட் தேர்வை அடியோடு அழிக்க வேண்டும் என்பதே திமுகவின் எண்ணம் என்றும் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன.