நீட் தேர்வு மசோதா: அமைச்சர் சி.வி சண்முகம் பதவி விலகவேண்டும்!

 

நீட் தேர்வு மசோதா: அமைச்சர் சி.வி சண்முகம் பதவி விலகவேண்டும்!

சட்டப்பேரவையில் முக. ஸ்டாலின் நீட் தேர்வு தொடர்பாகக் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.

சென்னை:  நீட் விலக்கு மசோதா நிராகரிப்பு தொடர்பாகத் தவறான தகவல் அளித்ததாக அமைச்சர் சிவி சண்முகம் பதவி விலக வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

stalin

சட்டப்பேரவையில் முக. ஸ்டாலின் நீட் தேர்வு தொடர்பாகக் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.அப்போது நீட் தேர்வு மசோதாவை 19 மாதங்களுக்கு முன்பே  மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளது. இதை முன்பே சொல்லியிருந்தால் மீண்டும் மசோதாவை அனுப்பி இருக்கலாம். ஆனால்  இதை மறைத்த அமைச்சர் சிவி சண்முகம் பதவி விலகவேண்டும்’ என்றார். 

cv

இதற்கு பதிலளித்த சட்டத்துறை  அமைச்சர் சிவி சண்முகம், மசோதாக்கள் திரும்பி வந்தால் சட்டம் இயற்ற தயாராக இருக்கிறோம் . நான் பொய் சொல்லியதை நிரூபித்தால் பதவி விலகத்தயார், அப்படி  நிரூபிக்க முடியவில்லை என்றால் எதிர்க்கட்சி தலைவர் பதவியிலிருந்து விலகத் தயாரா? என்று காரசார விவாதம் செய்தார்.இதைத்தொடர்ந்து  சண்முகத்தின் பதிலில் திருப்தியில்லை எனக் கூறி திமுக வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.