நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!

 

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!

தனிப்படை போலீசார் விசாரித்து வந்த இந்த வழக்கை வலுப்படுத்தும் விதமாக, சிபிசிஐடிக்கு மாற்ற டி.ஜி.பி உத்தரவிட்டுள்ளார்.

உதித் சூர்யா என்ற மாணவர், நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்ததாக எழுந்த புகாரில், காவல்துறை தனிப்படை அமைத்து விசாரணை செய்து வருகிறது. இது குறித்து கடந்த இரு நாட்களாக தனிப்படை காவல்துறை தேனி மருத்துவக் கல்லூரி டீனிடமும், சான்றிதழ் சரிபார்ப்பு குழுவிடமும் விசாரணை மேற்கொண்டு உதித் சூர்யாவிற்கு எதிராக பல ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

Udit surya

இந்நிலையில், உதித் சூர்யா முன் ஜாமீன் வழங்கக் கோரி மதுரை உயர்நீதி மன்றத்தில் மனு அளித்திருந்தார். அந்த மனு இன்னும் விசாரிக்கப் படாத நிலையில், தனிப்படை போலீசார் விசாரித்து வந்த இந்த வழக்கை வலுப்படுத்தும் விதமாக, சிபிசிஐடிக்கு மாற்ற டி.ஜி.பி உத்தரவிட்டுள்ளார்.