நீட் தேர்வில் தொடரும் ஆள்மாறாட்டங்கள்: காஞ்சிபுரத்தில் 3 மாணவர்கள் கைது!

 

நீட் தேர்வில் தொடரும் ஆள்மாறாட்டங்கள்: காஞ்சிபுரத்தில் 3 மாணவர்கள் கைது!

விசாரணையில், தாங்கள் குற்றங்கள் செய்ததாக ஒப்புக் கொண்ட உதித் சூர்யாவும் அவரது தந்தையும், இன்னும் நிறையப் பேர் நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ததாக வாக்கு மூலம் அளித்துள்ளனர்.

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவர் உதித் சூர்யாவையும், அவரது தந்தையையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர் . பின்னர், அவர்களை சிபிசிஐடி விசாரணையில் 15 நாட்கள் வைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதன் படி. சிபிசிஐடி அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. 

Udit surya

விசாரணையில், தாங்கள் குற்றங்கள் செய்ததாக ஒப்புக் கொண்ட உதித் சூர்யாவும் அவரது தந்தையும், இன்னும் நிறையப் பேர் நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ததாக வாக்கு மூலம் அளித்துள்ளனர். அதனையடுத்து, காஞ்சிபுரத்தில் தனியார் மருத்துவக் கல்லூரியில் பயின்று வரும் மாதவன், சரவணன், டேவிட் ஆகிய மூவரையும், அவர்களது தந்தைகளையும் சிபிசிஐடி காவல் துறையினர்  அதிரடியாகக் கைது செய்துள்ளனர். 

NEET

மேலும், அவர்களிடம் விசாரணை மேற்கொள்வதற்காக சிபிசிஐடி போலீசார் அவர்கள் 6 பேரையும் தேனிக்கு அழைத்துச் சென்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன. தொடரும் இந்த ஆள் மாறாட்டங்கள் மருத்துவக் கல்லூரி இயக்குநரகத்திடையேயும் காவல் துறையினரிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.