நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மருத்துவ கல்லூரி மாணவர் உதித் சூர்யா முன் ஜாமீன் மனுதாக்கல்!

 

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மருத்துவ கல்லூரி மாணவர் உதித் சூர்யா முன் ஜாமீன் மனுதாக்கல்!

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து மருத்துவ கல்லூரியில் சேர்ந்த மாணவர் உதித் சூர்யா தமக்கு முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து மருத்துவ கல்லூரியில் சேர்ந்த மாணவர் உதித் சூர்யா தமக்கு முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். 

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து ஒரு மாணவர் தேனி மருத்துவக் கல்லூரியில் படித்து வருவதாகச் 
 செய்தி வெளியானது. அதில் மாணவரின்  ஹால் டிக்கெட் புகைப்படமும், மாணவரின் புகைப்படமும்  வித்தியாசமாக இருந்துள்ளது.  இதனால் சர்ச்சை கிளம்பியது. புகார் எழுந்த அடுத்த நாள் முதல் சம்மந்தப்பட்ட மாணவர் உதித் சூர்யா கல்லூரிக்கு வருவதில்லை. இதுகுறித்து தேனி மருத்துவக் கல்லூரி சார்பில் அவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

உதித் சூர்யா

இந்நிலையில் நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து மருத்துவ கல்லூரியில் சேர்ந்த மாணவர் உதித் சூர்யா தமக்கு முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இம்மனு மீது விரைவில் விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.