நீட்தேர்வு ஆள் மாறாட்டத்தில் 2 பேராசிரியர்கள் மீது புகார்: மருத்துவக் கல்லூரி டீனுக்கு கொலை மிரட்டல்!

 

நீட்தேர்வு ஆள் மாறாட்டத்தில் 2 பேராசிரியர்கள் மீது புகார்: மருத்துவக் கல்லூரி டீனுக்கு கொலை மிரட்டல்!

மாணவர் உதித் சூர்யாவின் வருகைப் பதிவேட்டைத் திருத்தியதாகப் பேராசிரியர்கள் திருவேங்கடம் மற்றும் வேல்முருகன் மீது தேனி மருத்துவக் கல்லூரி டீன் ராஜேந்திரன் கண்டமனூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

நீட் தேர்வு ஆள் மாறாட்டத்தில் கைதாகிய உதித் சூர்யாவும் அவரது தந்தையும் சிபிசிஐடி காவலில் வைக்கப் பட்டுள்ளனர். அவர்கள் மீது போலீசார் கடும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருவரும், இன்னும் நிறையப் பேர் ஆள் மாறாட்டம் செய்ததாகவும், 2 தரகர்கள் இதற்கு உதவியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர். இன்னும் அவர்களிடம் விசாரணை தொடர்ந்த வண்ணமே உள்ளது. 

Udit surya

இந்நிலையில், மாணவர் உதித் சூர்யாவின் வருகைப் பதிவேட்டைத் திருத்தியதாகப் பேராசிரியர்கள் திருவேங்கடம் மற்றும் வேல்முருகன் மீது தேனி மருத்துவக் கல்லூரி டீன் ராஜேந்திரன் கண்டமனூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, பேராசிரியர்கள் இருவரும் டீன் ராஜேந்திரனை மிரட்டியுள்ளனர். 

 அதனால், மீண்டும் மருத்துவக் கல்லூரி டீன் ராஜேந்திரன், பேராசிரியர்கள் செய்த குற்றத்தை வெளிக்கொண்டு வந்ததால் அவர்கள் இருவரும் அவருக்கு மிரட்டல் விடுவதாகவும், தனக்குப் பாதுகாப்பும் அளிக்குமாறும் மனு அளித்துள்ளதாகத் தகவல்களுக்கு வெளியாகின்றன.