நீச்சல் குளத்தில் குளித்தால் கர்ப்பம் -விந்து வெளியேற்றுபவர்களால் நடக்கும் விந்தை -அதிர்ச்சி தகவல் 

 

நீச்சல் குளத்தில் குளித்தால் கர்ப்பம் -விந்து வெளியேற்றுபவர்களால் நடக்கும் விந்தை -அதிர்ச்சி தகவல் 

அதாவது “வலுவான விந்து” கொண்ட ஒரு நபர் வெளியேற்றிய விந்து உள்ள ஒரு குளத்தில்,ஒரு பெண்  நீந்தினால் கர்ப்பமாக வாய்ப்பிருப்பதாக  அவர்  பெண்களை எச்சரித்தார்.

ஜகார்த்தாவில்  இந்தோனேசிய அதிகாரி ஒருவருக்கு வியாழக்கிழமை பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளது.ஏனென்றால் அவர் சொன்ன கருத்து சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.அதாவது “வலுவான விந்து” கொண்ட ஒரு நபர் வெளியேற்றிய விந்து உள்ள ஒரு குளத்தில்,ஒரு பெண்  நீந்தினால் கர்ப்பமாக வாய்ப்பிருப்பதாக  அவர்  பெண்களை எச்சரித்தார்.

Sitti Hikmawatty

சிறுவர் பாதுகாப்பு ஆணைய உறுப்பினரான சிட்டி ஹிக்மாவட்டி என்ற அந்த அதிகாரியின் , தனது விஞ்ஞானப்பூர்வமாக  நிரூபணமாகாத கருத்துக்களுக்குப் பிறகு சர்ச்சையையும் ஆன்லைன் விமர்சனங்களையும் எதிர் கொண்டார் .
“ஒரு நீச்சல் குளத்தில் விடப்படும்  ஒரு குறிப்பிட்ட வகையான விந்து மிகவும் வலுவானது” என்று டீன் ஏஜ்  கர்ப்பம் குறித்த வீடியோ நேர்காணலின் போது ஹிக்மாவட்டி  கூறினார்.
அவர் மேலும் “ஒரு நபர் காமத்தால் தூண்டப்பட்டு நீச்சல் குளத்தில் விந்து வெளியேற்றினால் பாலியல் ஊடுருவல் இல்லாவிட்டாலும் பெண்ணுக்கு  கர்ப்பம் ஏற்படலாம்.”என்றார்.

swinning pool

 

இதனால் ஆன்லைனில்,சில ஆண்கள் நீச்சல் குளத்திற்குச் செல்வதற்கு முன்பு ஆணுறைகளை வாங்குவதாக உறுதியளித்தனர், .”எல்லா ஆண்களும் பெண்களுடன் நீந்தும்போது தூண்டப்படுவதில்லை” என்று பலர்  ஹிக்மாவட்டியின் கருத்துக்களைக் கண்டித்தனர் .

“ஆனால் ஒரு மனிதன் தூண்டப்பட்டு ஒரு குளத்தில் விந்து வெளியேற்றப்பட்டாலும் கூட விந்து விரைவாக குளோரினேட்டட் தண்ணீரில் இறந்துவிடும்.”என சிலர் கூறினர்.இதனால் ஹிக்மாவட்டி தனது கருத்துக்களை விரைவாக வாபஸ் பெற்றாலும்,முன்னாள் பல்கலைக்கழக பேராசிரியருக்கு தடை  நீக்கப்படுமா  என்று முடிவு செய்ய மூன்று பேர் கொண்ட அரசு ஆணையம் கூடியுள்ளது