“நீங்க பண்ண வேலையால காலேஜ்க்கே வரமுடியலே..” -க்ளாஸ் ரூமிலேயே சுடப்பட்ட மாணவ ,மாணவியர்

 

“நீங்க  பண்ண வேலையால காலேஜ்க்கே வரமுடியலே..” -க்ளாஸ் ரூமிலேயே சுடப்பட்ட மாணவ ,மாணவியர்

தன்னை பற்றி வதந்தி பரப்பிய தன்னுடைய இரண்டு நண்பர்களை துப்பாக்கியால் சுட்ட ஒரு மாணவரை போலீசார் தேடி வருகிறார்கள்

“நீங்க  பண்ண வேலையால காலேஜ்க்கே வரமுடியலே..” -க்ளாஸ் ரூமிலேயே சுடப்பட்ட மாணவ ,மாணவியர்

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் 22 வயது கிருத்திகா திரிவேதி என்ற பெண்ணோடு   22 வயது ஹுக்மேந்திர சிங் குர்ஜார் மற்றும் 24 வயதான  மந்தன் சிங் செங்கர் ஆகியோர் நண்பர்களாக இருந்தனர் .மூவரும் ஒரே கல்லூரியில் படித்து வந்தனர் .

இந்நிலையில் திடீரென கிருத்திகாவை குர்ஜார் காதலிக்க ஆரம்பித்தார் .இதனால் குர்ஜார் கிருத்திகாவிடமிருந்து மந்தனை பிரிக்க அவரை பற்றி கல்லூரி முழுவதும் வீண் வதந்திகளை பரப்பினார் இதற்கு கிருத்திகாவும் உடந்தையாக இருந்துள்ளார் .இதனால் மந்தன் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானார் .அதனால் கல்லூரிக்குள்ளேயே அவரின் நண்பர் குர்ஜாரை கொலை செய்ய முடிவெடுத்தார் .

அவரின் திட்டப்படி கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று ஒரு துப்பாக்கியை எடுத்து கொண்டு அந்த கல்லூரியின் வகுப்பறைக்குள் சென்றார் .அப்போது வகுப்பிலிருந்த குர்ஜாரை துப்பாக்கியால் சுட்டார் .பின்னர் அங்கு அவரின் காதலி கிருத்திகாவை கொல்ல அவரை தேடினார் அவர் அங்கில்லாததால்  அவரை தேடி அவரின் வீட்டிற்கு போனார் .அப்போது வீட்டு வாசலிலிருந்த கிருத்திகாவை துப்பாக்கியால் சுட்டார் அதன்  பிறகு அவர்  தங்கிருந்து தப்பியோடினார் .

பின்னர் அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் அந்த பெண் கிருத்திகாவையும் ,அவரின் காதலன் குர்ஜாரையும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு தூக்கி சென்றார்கள் .அங்கு தீவிர சிகிச்சையளித்தும் கிருத்திகா இறந்தார் .அதன் பிறகு குர்ஜருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது .பிறகு போலீசார் மந்தன் மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள் .

“நீங்க  பண்ண வேலையால காலேஜ்க்கே வரமுடியலே..” -க்ளாஸ் ரூமிலேயே சுடப்பட்ட மாணவ ,மாணவியர்