‘நீங்க  பணத்தை அனுப்புங்க நாங்க பாட்டிலை அனுப்பறோம்’-குடிகாரர்களை குறிவைத்து நடக்கும் ஆன்லைன் மோசடி ..

 

‘நீங்க  பணத்தை அனுப்புங்க நாங்க பாட்டிலை அனுப்பறோம்’-குடிகாரர்களை குறிவைத்து நடக்கும் ஆன்லைன் மோசடி ..

முதல் புகாரில், யூசுப்குடாவில் வசிக்கும் ஒரு தனியார் நிறுவன ஊழியர், தனது பகுதியில் அமைந்துள்ள ஒரு ஒயின் ஷாப்பிலிருந்து மதுபானங்களை வீட்டிற்கு வழங்குவோம் என்ற  ஒரு சமூக ஊடக விளம்பரத்தினை கண்டு விஸ்கி ஆர்டர் செய்ய ஆன்லைனுக்கு போனார். அங்கு ஸ்ரீ சாய் ஒயின் ஷாப்பின் மொபைல் எண்ணை அதில் கண்டார்.

இந்த ஊரடங்கால் மதுபிரியர்கள் சரக்கு கிடைக்காமல் கடும் அவஸ்தைக்கு உள்ளாகிறார்கள். குடிகாரர்களை குறிவைத்து ஆன்லைனில் நிறைய மோசடிகள் அரங்கேறுகின்றன. இந்த மோசடிகள் பற்றி சைபர் க்ரைமுக்கு புகார்கள் குவிகின்றன.
முதல் புகாரில், யூசுப்குடாவில் வசிக்கும் ஒரு தனியார் நிறுவன ஊழியர், தனது பகுதியில் அமைந்துள்ள ஒரு ஒயின் ஷாப்பிலிருந்து மதுபானங்களை வீட்டிற்கு வழங்குவோம் என்ற  ஒரு சமூக ஊடக விளம்பரத்தினை கண்டு விஸ்கி ஆர்டர் செய்ய ஆன்லைனுக்கு போனார். அங்கு ஸ்ரீ சாய் ஒயின் ஷாப்பின் மொபைல் எண்ணை அதில் கண்டார்.

liquor-door-delivery

உடனே அவர்  சமூக ஊடக இடுகையில் குறிப்பிடப்பட்டுள்ள மொபைல் எண்ணை டயல் செய்தபோது , ஒயின் ஷாப்பிலிருந்து பேசிய ஒருவர் ரூ .2,000 க்கு ஒரு பாட்டில் விஸ்கியை வழங்குவதாக உறுதியளித்து  உடனே  ஆன்லைனில் ரூ .1,000 முன்கூட்டியே செலுத்துமாறு கேட்டார்.
பிறகு அவர் தனது இ-வாலட் விண்ணப்பத்தை ஸ்கேன் செய்வதற்காக கியூஆர் குறியீட்டை அனுப்பினார். QR குறியீட்டை ஸ்கேன் செய்தபின், விஸ்கி ஆர்டர் செய்தவரின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ .50,000 டெபிட் பரிவர்த்தனை நடந்தது.அதிர்ச்சியடைந்த அந்த நபர் உடனே ஒயின் ஷாப் நம்பருக்கு மீண்டும் போன் செய்தபோது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியுற்று ஸைபர் க்ரைமில் புகாரளித்தார் 

கவுலிகுடாவில் வசிக்கும் மற்றொரு நபர், வெள்ளிக்கிழமை போலீஸை அணுகி இதேபோன்ற புகார் அளித்தார். வீட்டிற்கு மதுபானம் வழங்குவதாக கூறி, ரூ.50 ஆயிரம் ஆன்லைனில் மோசடி செய்ததாக அவர் குற்றம் சாட்டினார்.