“நீங்க தான் கடவுள்”.. துப்புரவு பணியாளர்கள் காலில் விழுந்து வணங்கிய அமைச்சர்!

 

“நீங்க தான் கடவுள்”.. துப்புரவு பணியாளர்கள் காலில் விழுந்து வணங்கிய அமைச்சர்!

தங்களது உயிரையும் பொருட்படுத்தாது வேலை செய்து வரும் அவர்களின் சேவைக்கு ஏதும் ஈடாகாது.

கொரோனாவுக்கு பயந்து மக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கிக் கிடக்கும் சூழலிலும், துப்புரவு பணியாளர்கள், போலீசார், மருத்துவர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். தங்களது உயிரையும் பொருட்படுத்தாது வேலை செய்து வரும் அவர்களின் சேவைக்கு ஏதும் ஈடாகாது. அதனால் ஆங்காங்கே மக்கள் துப்புரவு பணியாளர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அமைச்சர் உதயகுமார், துப்புரவு பணியாளர்கள் காலில் விழுந்து வணங்கிய சம்பவம் அனைவரையும் வியக்க வைத்துள்ளது. 

ttn

 
மதுரை திருமங்கலத்தில் தூய்மை பணியாளர்களை சந்தித்து அவர்களை அமைச்சர் உதயகுமார் கவுரவித்தார். அதன் பின்னர் நீங்கள் தான் கடவுள் என்று கூறிக் கொண்டே அவர்களின் காலில் விழுந்து வணங்கியுள்ளார். அப்போது, துப்புரவு பணியாளர்களில் சிலர் இப்போது வேலை செய்யும் அனைவரையும் பணி நிரந்தம் செய்ய வேண்டும் என்று கேட்டதற்கு, அரசு அதனை நிச்சயம் செய்யும் என நம்பும் என அமைச்சர் கூறியுள்ளார்.