“நீங்கள் யார் எடப்பாடி?” – தமிழக முதல்வருக்கு கேள்வி எழுப்பி ட்விட்டரில் நெட்டிசன்கள் ஹேஷ்டேக்

 

“நீங்கள் யார் எடப்பாடி?” – தமிழக முதல்வருக்கு கேள்வி எழுப்பி ட்விட்டரில் நெட்டிசன்கள் ஹேஷ்டேக்

தமிழக முதல்வருக்கு கேள்வி எழுப்பி ட்விட்டரில் நெட்டிசன்கள் ஹேஷ்டேக் ஒன்றை வைரலாக்கி வருகின்றனர்.

சென்னை: தமிழக முதல்வருக்கு கேள்வி எழுப்பி ட்விட்டரில் நெட்டிசன்கள் ஹேஷ்டேக் ஒன்றை வைரலாக்கி வருகின்றனர்.

பிரதமர் மோடியின் அறிவிப்பை பொறுத்தே தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என நேற்று தலைமை செயலாளர் சண்முகம் பேசுகையில் குறிப்பிட்டார். இதனால் கோபமுற்ற நெட்டிசன்கள் தமிழக முதல்வரால் தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்க முடியவில்லையா என கேள்வி எழுப்பி சமூக வலைதளமான ட்விட்டரில் அவரை விமர்சித்து வருகின்றனர்.

ttn

இதைத் தொடர்ந்து #whoareyouedappadi என்ற ஹேஷ்டேக் தமிழக அளவில் ட்ரெண்டாகி வருகிறது. நாட்டின் பிற மாநில முதல்வர்கள் ஊரடங்கு நீட்டிப்பது குறித்து தாங்களே முடுவு எடுத்து வருகிறார்கள். ஆனால் தமிழக முதல்வரால் அவ்வாறு முடிவு எடுக்க முடியவில்லையா என நெட்டிசன்கள் கடுமையாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.