நீங்கள் கடவுளின் குழந்தை அப்பா… : சௌந்தர்யா ரஜினிகாந்த் நெகிழ்ச்சி
சௌந்தர்யா 8 வருடங்களுக்கு முன்பு ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்ததை குறித்து பதிவு வெளியிட்டுள்ளார்.
சென்னை: சௌந்தர்யா 8 வருடங்களுக்கு முன்பு ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்ததை குறித்து பதிவு வெளியிட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் சில வருடங்களுக்கு முன்பு உடல் நிலை சரி இல்லாமல் அவதிப்பட்டு வந்தார். சிறுநீரக பாதிப்பு மற்றும் நவீன டயாலிஸிஸ் சிகிச்சை பெறுவதற்காக பின்பு சிங்கப்பூரில் உள்ள மவுன்ட் எலிசபெத் மருத்துவ மனைக்கு சென்று வந்தார்.
அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்ததைக் கேட்ட ரசிகர்கள் அனைவரும் ஒன்று கூடி அவருக்காக பிரார்த்தனை செய்தனர். பின்பு 13/7/2011 அன்று சிகிச்சை முடிந்து இந்தியாவிற்குத் திரும்பினார்.
A day we will forever remember,the day we returned with Appa to Chennai after his medical treatment in singapore #13.7.11 8 years ago. You are truly gods child Appa. To all those hearts who prayed and continue to pray for my father and my family THANK YOU ???????? pic.twitter.com/ylBWOjTvTW
— soundarya rajnikanth (@soundaryaarajni) July 13, 2019
இந்த நிலையில் அந்த நிகழ்வை நினைவுபடுத்தும் வகையில் அவரது மகள் சௌந்தர்யா இது குறித்துப் பதிவு ஒன்று வெளியிட்டார். அதில், ‘வாழ் நாளில் மறக்க முடியாத நாள், என் அப்பா சிங்கப்பூரிலிருந்து, சென்னைக்குச் சிகிச்சை முடிந்து வந்தது. 8 வருடம் முன்பாக வந்த அதே நாள் இன்று (13.7.11 ). உன்மையில் நீங்கள் கடவுளின் குழந்தை. என் அப்பாவிற்காக பிரார்த்தனை செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளார்.