நிவாரண பைகளில் படம் வேண்டாம்! – கமல் அட்வைஸ்
கொரோனா நிவாரண உதவிகளை தன்னார்வலர்களுடன் இணைந்து மக்கள் நீதி மய்யம் கட்சியினரும் வழங்கி வருகின்றனர். இது தொடர்பான தகவல் மக்கள் நீதி மய்யம் ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டு வருகிறது.
மக்கள் நீதி மய்யம் வழக்கும் நிவாரண பைகளில் தன்னுடைய படத்தை அச்சிட வேண்டாம் என்று கமல் தெரிவித்துள்ளார்.
கொரோனா நிவாரண உதவிகளை தன்னார்வலர்களுடன் இணைந்து மக்கள் நீதி மய்யம் கட்சியினரும் வழங்கி வருகின்றனர். இது தொடர்பான தகவல் மக்கள் நீதி மய்யம் ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தன்னுடைய படத்தை நிவாரண பைகளில் போட வேண்டாம் என்று கமல் கட்சியினருக்கு அறிவுரை கூறியுள்ளார்.
வாழ்த்துகள் @MNMZnSalem மேன்மேலும் மக்கள் பணி சிறக்கட்டும்…
நாளை நமதே!#MNMDuringCorona#MakkalNeedhiMaiam https://t.co/ctLtPAy7x0
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) April 16, 2020
நிவாரணப் பொருட்கள் வழங்கும் பைகளில் கட்சித் தலைவர்கள் படங்கள் இடம் பெறுவது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் சமூக ஊடக பக்கங்களில் பகிரப்படுகிறது. இதனால் தன்னுடைய படத்தை அச்சிட வேண்டாம் என்று அறிவுறுத்திய கமல், உதவி செய்யும்போது அதை படம் எடுத்து வெளியிடுவது ஊடகங்களை அழைத்து சென்று உதவி வழங்கும் படம் எடுப்பது உள்ளிட்டவற்றை மேற்கொள்ள வேண்டாம் என்று கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
வாழ்த்துகள் @MNMDtRamnad மேன்மேலும் மக்கள் பணி சிறக்கட்டும்…
நாளை நமதே!#MNMDuringCorona#MakkalNeedhiMaiam https://t.co/i3gIxOWCR6
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) April 16, 2020