நிலவுக்கு செல்ல முடியும், செவ்வாய்க்கு செல்ல முடியும் ஆனா பூமியில விழுந்த குழந்தைய மீட்க முடியல – வைகோ குமுறல்!

 

நிலவுக்கு செல்ல முடியும், செவ்வாய்க்கு செல்ல முடியும் ஆனா பூமியில விழுந்த குழந்தைய மீட்க முடியல – வைகோ குமுறல்!

நிலவுக்கு செல்ல முடிகிறது. செவ்வாய் கிரகத்திற்கு செல்ல முடிகிறது. ஆனால் பூமியில் விழுந்த குழ்ந்தையை காப்பாற்ற முடியவில்லை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 

நிலவுக்கு செல்ல முடிகிறது. செவ்வாய் கிரகத்திற்கு செல்ல முடிகிறது. ஆனால் பூமியில் விழுந்த குழ்ந்தையை காப்பாற்ற முடியவில்லை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

surjith

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “மத்திய, மாநில அரசுகள் இது போன்ற நிலைகளில் மாட்டிக்கொள்ளும் குழந்தைகளை காப்பாற்ற புதிய கருவிகளை கண்டுபிடிக்க வேண்டும். அமைச்சர்கள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் கடந்த 4 நாட்களாக குழந்தை விழுந்த இடத்திலேயே உள்ளனர். தற்போது நடுகாட்டுப்பட்டியில் மழை பெய்கிறது. நிலவுக்கு செல்ல முடிகிறது செவ்வாய்க்கு செல்ல முடிகிறது ஆனால் பூமியில் விழுந்த குழந்தையை காப்பாற்ற முடியவில்லை

vaiko

சுஜித் பெயரை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் உச்சரித்து வருகின்றனர். குழந்தை சுஜித்தின் நிலைக்கண்டு நெஞ்சு பதைபதைக்கிறது.  இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறினார்.