நிலவில் 5 ஏக்கர் நிலம் வாங்கிய நபர்! குடியேறுவது சாத்தியமா? 

 

நிலவில் 5 ஏக்கர் நிலம் வாங்கிய நபர்! குடியேறுவது சாத்தியமா? 

நிலாவில் இந்தியர் ஒருவர் ஐந்து ஏக்கர் நிலம் வாங்கியிருப்பதாகவும், விரைவில் குடியேறவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

நிலாவில் இந்தியர் ஒருவர் ஐந்து ஏக்கர் நிலம் வாங்கியிருப்பதாகவும், விரைவில் குடியேறவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

சமீபத்தில் சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டதை தொடர்ந்து, இதை இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் மட்டுமின்றி இந்திய மக்களும் கொண்டாடி வருகின்றனர். இதற்கு உலக நாடுகளும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், இந்தியாவின் ஐதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜிவ் பாக்டி என்பவர் கடந்த 2003-ஆம் ஆண்டு 140 டாலர் கொடுத்து நிலவில் 5-ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார். இதற்காக அமெரிக்காவில் உள்ள நிலவு நிலப்பதிவு அலுவலகத்தில் அத்தாட்சியும் வாங்கியுள்ளார். விரைவில் குடும்பத்துடன் நிலவுக்கு சுற்றுலா செல்வேன் என்றும் ராஜிவ் கூறியுள்ளார்.

கடந்த 1979-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட விண்வெளி ஒப்பந்த அடிப்படையில், நிலவு உட்பட விண்வெளி பொருட்கள் மீது யாரும் உரிமை கொண்டாடக் கூடாது என இந்தியா உட்பட 100 நாடுகள் கையெழுத்து போட்டுள்ளன. மேலும், அமெரிக்காவில் உள்ள நியூயார்க் சிட்டியில் உள்ள நிலவு நிலப்பதிவு என்பது முற்றிலும் அரசு அனுமதியுடன் செயல்படுகிறதா என்பது சந்தேகம் தான். எனவே விண்வெளியை யாரும் சொந்தம் கொண்டாட முடியாத நிலையில் நிலவில் நிலம் விற்கும் நிறுவனங்கள் இருப்பது முற்றிலும் பொய். அந்த நபர் அந்த நிறுவனத்தை நம்பி ஏமாந்து உள்ளார் என்பது தான் நிதர்சனம்.