நிலச்சரிவில் சிக்கி 60 பேர் பலி! மீட்பு பணிகள் தீவிரம்

 

நிலச்சரிவில் சிக்கி 60 பேர் பலி! மீட்பு பணிகள் தீவிரம்

பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் திடீரென ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் சிக்கி ஏழு குழந்தைகள் உட்பட 60 பேர் வரையில்  உயிரிழந்துள்ளதாக ஆளுநர் தெரிவித்துள்ளார். 

நம் இந்தியாவைப் போலவே தற்போது கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவிலும் பருவ மழை வெளுத்து வாங்கி கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் பருவ மழையினால் கென்யாவின் மேற்கு பொக்கோட் மாவட்டத்தில் சனிக்கிழமை அன்று பயங்கரமான அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது.

kenya

பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் திடீரென ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் சிக்கி ஏழு குழந்தைகள் உட்பட 60 பேர் வரையில்  உயிரிழந்துள்ளதாக ஆளுநர் தெரிவித்துள்ளார். 

kenya

தொடர்ந்து பெய்து வரும் மழையினால் அந்த பகுதிகளில் உள்ள சாலைகள், பாலங்கள் அனைத்தும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளதால் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட முடியாமல் தொய்வு ஏற்பட்டுள்ளதாக பொகோட்டா மாவட்ட ஆணையர் அபோலோ தெரிவித்தார். மேலும், நிலச்சரிவில் சிக்கிக் காயமடைந்தவர்கள் வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்கள் விரைவில் மீண்டு வர பிரார்த்தனை செய்து கொள்கிறேன் என்றார். 

kenya

இதற்கிடையே நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கு ராணுவத்துறை, காவல் துறை ஹெலிகாப்டர்கள் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நிலச்சரிவு ஏற்படக்குடிய அபாயமான  பகுதிகளை விட்டு பொதுமக்கள் உடனடியாக பாதுகாப்பு இடங்களுக்குச் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.