நிறைமாத கர்ப்பிணி பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி

 

நிறைமாத கர்ப்பிணி பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அம்பாசமுத்திரம்புதூர் கிராமத்தைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி பெண்ணிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவரை சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு சுகாதாரத்துறையினர் அனுப்பி வைத்தனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அம்பாசமுத்திரம்புதூர் கிராமத்தைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி பெண்ணிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவரை சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு சுகாதாரத்துறையினர் அனுப்பி வைத்தனர். மேலும் இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருப்பூரிலிருந்து வந்தாகவும், வெள்ளிக்கிழமை தொட்டப்பநாயக்கணூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனைக்காக சென்ற போது கொரோனா பரிசோதனையான சுவாப் டெஸ்ட் செய்துள்ளார். இந்நிலையில் இன்று அவருக்கு எடுக்கப்பட்ட சுவாப் டெஸ்டின் முடிவில் கொரோனா தொற்று உறுதி என கண்டறியப்பட்டது. 

coronavirus

இந்நிலையில் அவரது உறவினர்கள் உள்பட சுமார் 7 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மதுரையில் நேற்றுவரை 60 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று புதிதாக 15 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.