நிர்வாணமாக நடுரோட்டில் சென்ற இளம்பெண்.. ஆடையோடு சென்ற போலீசார் : அதிர்ச்சியில் பொதுமக்கள் !

 

நிர்வாணமாக நடுரோட்டில் சென்ற இளம்பெண்.. ஆடையோடு சென்ற போலீசார் : அதிர்ச்சியில் பொதுமக்கள் !

ஒரு போலீஸ் அதிகாரி அந்த துணியை அந்த பெண் மீது போர்த்தி விட்டு அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை செய்துள்ளார்.

சென்னை உள்ள  ராயப்பேட்டை பகுதியில் இன்று  அதிகாலை ஒரு உருவம் நடந்து செல்வது போல தோன்றியதால் பொதுமக்கள், உற்று நோக்கியுள்ளனர். பிறகு அது ஒரு பெண் என்று அறிந்து பொதுமக்கள்,   ஆடையில்லாமல் நடுரோட்டில் நடந்து சென்றதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்த பெண்ணுக்கு வயது 20 இருக்குமாம். 

ttn

உடனே அந்த பெண் குறித்து ராயப்பேட்டை போலீசுக்கு  பொதுமக்கள் தகவல் கொடுக்க, அங்கு வந்த போலீசார் அந்த பெண்ணுக்கு ஆடையையும் கொண்டு வந்துள்ளனர். பின்னர், ஒரு போலீஸ் அதிகாரி அந்த துணியை அந்த பெண் மீது போர்த்தி விட்டு அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை செய்துள்ளார். அப்போது அந்த பெண்ணுக்கு தெலுங்கு மொழியைத் தவிர வேறு எந்த மொழியும் தெரியவில்லை என்பதால் அவர் ஏன் அப்படி வந்தார்? என்ன நடந்தது.. என எதுவும் அறிந்து கொள்ள முடியவில்லையாம். 

tn

அதனை தொடர்ந்து அந்த பெண் திடீரென வயிற்று வலியால் துடித்துக் கொண்டிருந்ததால், அவரை  போலீசார் ராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தற்போது அந்த பெண் சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து அந்த பெண் யார்..எப்படி இங்கு வந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பான விசாரணையில் அந்த பெண் மன நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த பெண் நடந்து வந்த வழியே இருக்கும் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர்.