நிர்வாணமாக சுற்றி திரிந்து இரவில் கொலை செய்யும் சைக்கோ இளைஞர்: உண்மை நிலவரம் என்ன?

 

நிர்வாணமாக சுற்றி திரிந்து இரவில் கொலை செய்யும் சைக்கோ இளைஞர்: உண்மை நிலவரம் என்ன?

ஆடைகளின்றி நிர்வாணமாக நள்ளிரவில்  சுற்றித்திரிந்து தாக்குதல் நடத்தும் சைக்கோ நபரால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

கன்னியாகுமரி: ஆடைகளின்றி நிர்வாணமாக நள்ளிரவில்  சுற்றித்திரிந்து தாக்குதல் நடத்தும் சைக்கோ நபரால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் பரகுன்று பகுதியை சேர்ந்தவர சுந்தர்ராஜ், இவர் அப்பகுதியில் மார்த்தாண்டம் சி.எஸ்.ஐ தேவாலயத்தில் இரவு காவலாளியாக பணியாற்றி வந்தார். கடந்த 28-ம் தேதி இவர் பணியில் இருந்த நிலையில், நள்ளிரவு நேரத்தில் வந்த வாலிபர் ஒருவர், தேவாலயம் முன் வந்து நடனமாடியுள்ளார்.

பின்னர் திடீரென காவலாளி மீது பாய்ந்த சைக்கோ வாலிபர், அவரை கீழே தள்ளிவிட்டுத் தாக்கியுள்ளார்.பின்னர் காவலாளி மீது கல்லை போட்டு தாக்கியுள்ளார்.பின்னர் அங்கிருந்து ஓடி ஒரு புதருக்குள் மறந்து விட்டார்.  ரத்த வெள்ளத்தில் கிடந்த காவலாளி சுந்தர்ராஜை, அடுத்த நாள் காலையில் மீட்ட சக ஊழியர்கள்  கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி காவலாளி சுந்தர்ராஜ் உயிரிழந்தார்.

இது குறித்த தகவலை தொடர்ந்து தேவாலயத்தில் உள்ள சிசிடிவி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்த மார்த்தாண்டம் போலீசார், சைக்கோ வாலிபர் காவலாளியை தாக்கிய காட்சிகளை வைத்து, அவரை தேடி வருகின்றனர்.பொதுமக்கள் அச்சமின்றி நடமாட சைக்கோ வாலிபரை போலீசார் உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று மார்த்தாண்டம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.