நிர்வாணப் புகைப்படத்தை இணையத்தில் வெளியிடுவேன்…. ஆணை மிரட்டி பணம் பறித்த பெண் கைது! 

 

நிர்வாணப் புகைப்படத்தை இணையத்தில் வெளியிடுவேன்…. ஆணை மிரட்டி பணம் பறித்த பெண் கைது! 

பேஸ்புக்கில் அறிமுகமான நபரை அச்சுறுத்தி பணம் பறித்த பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேஸ்புக்கில் அறிமுகமான நபரை அச்சுறுத்தி பணம் பறித்த பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர் பேஸ்புக் மூலம் அறிமுகமான ஆண் நண்பரிடம் நிர்வாண புகைப்படங்களை அனுப்புமாறு கூறியுள்ளார். அந்த பெண் நெருக்கமாக பேசுவதை நம்பி அந்த ஆணும் அந்த பெண்ணுக்கு புகைப்படங்களை அனுப்பியுள்ளார். தற்போது அந்த பெண், பணம் தரவில்லை என்றால் இணையத்தில் உன்னுடைய நிர்வாண புகைப்படங்களை பதிவிட்டுவிடுவேன் என மிரட்டியுள்ளார். இதுபோன்று அச்சுறுத்தி அச்சுறுத்தி அந்த ஆணிடமிருந்து 24 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டுள்ளார்.

facebook

இதற்கு மேலும் அந்த பெண்ணின் மிரட்டலை சகித்துக்கொள்ள முடியாது என நினைத்த அந்த பாதிக்கப்பட்ட ஆண் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். புகாரையடுத்து, அந்த பெண் மற்றும் அவருக்கு உதவிய 28 வயதான முன்னாள் விமானப்படை வீரரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.