நிர்மலா தேவி பாலியல் லிஸ்ட் பொன்னாருக்கு தெரியும்: முத்தரசன் பரபரப்பு தகவல்

 

நிர்மலா தேவி பாலியல் லிஸ்ட் பொன்னாருக்கு தெரியும்: முத்தரசன் பரபரப்பு தகவல்

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி சிறையில் இருக்கும் பேராசிரியர் நிர்மலா தேவியை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என முத்தரசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

வேலூர்: பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி சிறையில் இருக்கும் பேராசிரியர் நிர்மலா தேவியை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என முத்தரசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

வருகின்ற டிசம்பர் 19-ஆம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற இருக்கும் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க மாநில மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வேலூர் மாவட்டம் காட்பாடியில் இன்று நடைபெற்றது. 

அக்கூட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தில் ஜனநாயக முறையில் அமைதியாக போராட்டம் நடத்தக் கூட அனுமதி மறுக்கப்படுகிறது. இந்த அடக்குமுறையைக் கண்டித்து வரும் 16-ஆம் தேதி தமிழகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் கண்டன போராட்டம் நடத்தப்படும். 

mutharasan

பேராசிரியை நிர்மலா தேவி கடந்த 6 மாதங்களாக சிறையில் உள்ளார். நிர்மலாதேவியை ஜாமீனில் விடுவிக்க வேண்டும். இவர் சம்பந்தப்பட்ட பாலியல் புகாரில் யாருக்குத் தொடர்பு உள்ளது என்பது குறித்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தெரியும். அந்த பெயர்களை அவர்  வெளியிட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநருக்கும் தொடர்பு இருப்பதாக நக்கீரன் இதழில் செய்தி வெளியாகியதால் அவர் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், முத்தரசனின் இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.