நிர்மலாதேவி மீதான வழக்கு 26-ஆம் தேதிக்கு மகிளா நீதிமன்றம் ஒத்திவைப்பு

 

நிர்மலாதேவி மீதான வழக்கு 26-ஆம் தேதிக்கு மகிளா நீதிமன்றம் ஒத்திவைப்பு

நிர்மலாதேவி மீதான வழக்கை 26-ஆம் தேதிக்கு மகிளா நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர்: நிர்மலாதேவி மீதான வழக்கை 26-ஆம் தேதிக்கு மகிளா நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்கும் விதத்தில் செல்போனில் பேசியதாக அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி, பேராசிரியர் முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த விவகாரம் தமிழ்நாட்டில் பூதாகரமாக வெடித்தது. ஆனால் மூவரும் ஆகியோர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்தனர். இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

ttn

முன்னதாக நிர்மலா தேவியின் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் வழக்கிலிருந்து விலகிக் கொள்வதாக கூறி விலகிக் கொண்டார். இந்நிலையில், இன்று வழக்கு விசாரணைக்காக நிர்மலாதேவி, உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்கள். வழக்கை விசாரித்த நீதிபதி வருகிற 26-ஆம் 3 பேரும் ஆஜராக உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.