நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு மார்ச் 20ல் தூக்கு !

 

நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு மார்ச் 20ல் தூக்கு !

டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கீழே வீசப்பட்டார்.

டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கீழே வீசப்பட்டார். அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்த வழக்கின் குற்றவாளிகள் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், ஒருவர் சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டார். மற்றொருவர் சிறுவன் என்பதால் அவரும் விடுதலை செய்யப்பட்டார். எஞ்சியிருக்கும் 4 பேரையும் நாளை தூக்கிலிடும் படி டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 

ttn

இந்த டெத் வாரண்ட்டை ரத்து செய்யக் கோரி குற்றவாளிகளில் அக்சங் சிங் மற்றும் பவன் குமார் குப்தா என்பவர்கள்  உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு தொடரப் பட்டதின் நோக்கம், தூக்குத் தண்டனையை ஒத்திவைக்க வேண்டும் என்பதே என்று கூறப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் குற்றவாளி பவன் குமாரின் மறுசீராய்வு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து, குற்றவாளிகள் 4 பேரையும்  தூக்கிலிட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனையடுத்து குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு கருணை மனு அனுப்பினார். 

tthn

மனு மீதான  முடிவைக் குடியரசுத் தலைவர்  எடுக்காததால் தண்டனையை நிறுத்தி வைத்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பின்னர், பவன் குமாரின் கருணை மனுவைக் குடியரசுத் தலைவர் நிராகரித்து விட்டார். இந்நிலையில், நிர்பயா வழக்கின் குற்றவாளிகளை வரும் 20 ஆம் தேதி காலை 5:30 மணிக்குத் தூக்கிலிட வேண்டும் என்று டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.