நிர்பயா வழக்கு குற்றவாளிகள் தொடர்ந்து தந்திரம்…..வினய் குமாரின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட அடுத்த சில மணி நேரத்தில் மற்றொரு குற்றவாளி அக்சய் கருணை மனு தாக்கல்…

 

நிர்பயா வழக்கு குற்றவாளிகள் தொடர்ந்து தந்திரம்…..வினய் குமாரின்  கருணை மனு நிராகரிக்கப்பட்ட அடுத்த சில மணி நேரத்தில் மற்றொரு குற்றவாளி அக்சய் கருணை மனு தாக்கல்…

நிர்பயா வழக்கு குற்றவாளி வினய் குமாரின் கருணை மனுவை குடியரசு தலைவர் நிராகரித்த அடுத்த சில மணி நேரத்தில் மற்றொரு குற்றவாளியான அக்சய் குடியரசு தலைவருக்கு கருணை மனு தாக்கல் செய்துள்ளார்.

நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேரும் ஒருவர் பின் ஒருவராக நீதிமன்றங்களில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்து தங்களது தண்டனை நிறைவேற்றுவதை தள்ளிபோட்டு வந்தனர். இந்நிலையில் குற்றவாளிகள் 4 பேரையும்  பிப்ரவரி 1ம் தேதியன்று (நேற்று) தூக்கிலிட நீதிமன்றம் புதிய டெத் வாரண்ட் பிறப்பித்தது. இதிலிருந்தும் தப்பிக்கும் நோக்கில், குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங், தனது கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்ததை எதிர்த்து, நீதித்துறை மறுஆய்வு செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். உச்ச நீதிமன்றம் நேற்று அதனை ரத்து செய்தது. நிர்பயா வழக்கில் மற்றொரு குற்றவாளியான அக்சய் தாக்கூர் தாக்கல் செய்த  curative மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

வினய் சர்மா

அடுத்து  நிர்பயா வழக்கில் மற்றொரு குற்றவாளியான வினய் குமார் சர்மா நேற்று தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி குடியரசு தலைவரிடம் கருணை மனு தாக்கல் செய்தார். இதனையடுத்து நீதிமன்றம் அடுத்த உத்தரவு பிறப்பிக்கும்வரை குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிட கூடாது என உத்தரவிட்டது. இந்த சூழ்நிலையில் வினய் குமாரின் கருணை மனுவை குடியரசு தலைவர் நிராகரித்தார். அதற்கு அடுத்த சில மணி நேரங்களில் மற்றொரு குற்றவாளியான அக்சய் தனது தூக்கு தண்டனையை ரத்துக் செய்யக்கோரி குடியரசு தலைருக்கு கருணை மனு தாக்கல் செய்துள்ளார்.

நிர்பயா வழக்கு குற்றவாளிகள்

இதற்கிடையே நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கலிடுவதற்கு டெல்லி நீதிமன்றம் தடை விதித்ததை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்தது. இது தொடர்பாக பதில் அளிக்கும்படி, நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேருக்கும், திஹார் சிறை அதிகாரிகளுக்கும் உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. மத்திய அரசு தாக்கல் செய்த மனு மீண்டும் இன்று மதியம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.