நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு வரும் 20-ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றம்

 

நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு வரும் 20-ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றம்

நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேருக்கு வருகிற 20-ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.

டெல்லி: நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேருக்கு வருகிற 20-ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.

நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேருக்கு வருகிற 20-ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. அன்று அதிகாலை 5.30 மணிக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்ற டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 2012-ஆம் மருத்துவ கல்லூரி மாணவி நிர்பயா பேருந்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கு இதுவாகும்.

ttn

குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மறு சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், கடந்த 2-ஆம் தேதி குடியரசுத் தலைவர் முன் கருணை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.  இந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.  இதனால் குற்றவாளிகள் 4 பேரின் கருணை மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை தூக்கில் போடுவதற்கான சட்டப்பூர்வ தடை எதுவும் இல்லாத சூழல் உள்ளது. இந்த வழக்கில் மூன்று முறை தேதி குறிக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் வரும் 20-ஆம் தேதி தூக்கிலிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.