நிருபரின் ஜாதியைக் கேட்டு வன்மத்தைக் கக்கிய டாக்டர்.கிருஷ்ணசாமி… செய்தியாளர் சந்திப்பில் செய்த அநாகரீகம்!?

 

நிருபரின் ஜாதியைக் கேட்டு வன்மத்தைக் கக்கிய டாக்டர்.கிருஷ்ணசாமி… செய்தியாளர் சந்திப்பில் செய்த அநாகரீகம்!?

எந்த ஊர்? எந்த சாதி  என்று பத்திரிகையாளர் ஒருவரிடம் கேள்வி எழுப்பிய  புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சென்னை:  எந்த ஊர்? எந்த சாதி  என்று பத்திரிகையாளர் ஒருவரிடம் கேள்வி எழுப்பிய  புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

புதிய தமிழகம் கட்சித் தலைவரான டாக்டர்.கிருஷ்ணசாமி, தென்காசி நாடாளுமன்றத் தேர்தலில் 6-வது முறையாகப் போட்டியிட்டார். சுயேச்சையாகப் பலமுறை போட்டியிட்டு தோல்வியடைந்த அவர், கடந்த முறை தி.மு.க கூட்டணி சார்பாகப் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். அதனால், இந்த முறை தனிச் சின்னத்தில் போட்டியிடாமல், அ.தி.மு.க-வின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டார். இருப்பினும் அவர் இந்த முறையும் தி.மு.க வேட்பாளரான தனுஷ்குமாரிடம் தோல்வியைத் தழுவினார்.

krishansay

இந்நிலையில் இன்று (மே 28)   புதிய தமிழகம் கட்சியின் தலைவர்  கிருஷ்ணசாமியின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பத்திரிகையாளர் ஒருவர் , தென்காசி தொகுதியில் தோல்வி அடைந்தது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அதைக் கேட்டுக் கடுப்பான கிருஷ்ணசாமி, நீ எந்த ஊர்? என்ன ஜாதி? ” என்று பதிலுக்கு கேட்டு அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். இதனால் அங்கிருந்த பத்திரிக்கையாளர்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

krishanasamy

இந்த சம்பவத்திற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, ‘ இன்று (28-05-2019) செவ்வாய்க்கிழமை காலை புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாகடர் கிருஷ்ணசாமியின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த செய்தியாளர் சந்திப்பில் தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் டாக்டர் கிருஷ்ணசாமியின் தோல்வி குறித்து கேள்வி ஒன்றை எழுப்பினார். கேள்வி கேட்ட நிருபர் கோகுலை ஒருமையில் பேசிய டாக்டர் கிருஷ்ணசாமி , ” நீ எந்த ஊர்? என்ன ஜாதி? ” என்று வன்மத்தை காட்டியுள்ளார். ஊடகங்கள் மற்றும் செய்தியாளர் மீதான டாக்டர் கிருஷ்ணசாமியின் வன்மமான பேச்சை சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டிக்கிறது.மேலும் டாக்டர் கிருஷ்ணசாமி தனது செயலுக்கு உடனடியாக வருத்தம் தெரிவிக்க வேண்டும்  என்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது.

press

ஜாதி மொழி மத அடையாளங்களுக்குள் பத்திரிகையாளர்களைத் திணிக்க முயற்சி செய்யும் போக்கு ஆபத்தானது மட்டுமல்ல அருவருக்கத்தக்கதும் கூட.  சமீபகாலமாக செய்தியாளர் சந்திப்புகளில் சில அரசியல் தலைவர்கள் , செய்தியாளர்களிடம் எந்த சானல் ? எந்த ஊர்? என்றெல்லாம் மிரட்டும் போக்கும் அதிகரித்து வருகிறது.

பத்திரிகையாளர் என்ற  அடையாளம் தான் பத்திரிகையாளர்களுக்கே தவிர அவர்கள் மீது வேறு எந்த அடையாளங்களை திணித்திடவோ, மிரட்டிடவோ நினைக்க வேண்டாம் என்றும்,  ஆட்சியாளர்கள் , காவல்துறையினர், அரசியல்வாதிகள் என அனைத்து தரப்பினரும் பத்திரிகையாளர்களிடம் அடிப்படை மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது.’

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.