நியூ இயர், பொங்கல் பண்டிகைக்காக 13 நாட்களுக்குச் சிறப்பு மலை ரயில் !

 

நியூ இயர், பொங்கல் பண்டிகைக்காக 13 நாட்களுக்குச் சிறப்பு மலை ரயில் !

புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகைகளை முன்னிட்டு 13 நாட்களுக்கு உதகை முதல் மேட்டுப்பாளையம் வரை 132 இருக்கைகளைக் கொண்ட சிறப்பு மலை ரயில்கள் இயக்கப் போவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

பருவமழையின் தாக்கத்தின் காரணமாக மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை இயங்கும் மலை ரயில் சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. ரயில் பாதைகளில் மண் சரிவு ஏற்பட்டும், பாறைகள் உருண்டு விழுந்தும் ரயில்களை இயக்க முடியாத சூழ்நிலை நிலவியது. தற்போது மழை சற்று குறைந்துள்ளதால் கடந்த சில நாட்களாக மலை ரயில் மீண்டும் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகைகளை முன்னிட்டு 13 நாட்களுக்கு உதகை முதல் மேட்டுப்பாளையம் வரை 132 இருக்கைகளைக் கொண்ட சிறப்பு மலை ரயில்கள் இயக்கப் போவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

ttn

இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது. இந்த ரயில்கள் ஜனவரி 4 ஆம் தேதி முதல் அனைத்து சனிக்கிழமைகளிலும், ஜனவரி 5 ஆம் தேதி முதல் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயக்கப்படும் என்று  தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும், மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 9:10 மணிக்குப் புறப்பட்டு பிற்பகல் 2:30 மணிக்கு உதகை வந்தடையும். பின்னர், மறு நாள் உதகையில் இருந்து காலை 11:25க்கு புறப்பட்டு மாலை 4:30 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.