நியூயார்க்கில் அதிர்ச்சி: நடுவானில் 100 விமான பயணிகளுக்கு மர்ம காய்ச்சல்!

 

நியூயார்க்கில் அதிர்ச்சி: நடுவானில் 100 விமான பயணிகளுக்கு மர்ம காய்ச்சல்!

நியூயார்க்: ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து விமானம் மூலம் நியூயார்க் சென்ற பயணிகள் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எமிரேட்ஸ் ஏர்லைனர் விமானம்  என்ற விமானம் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 521பயணிகளுடன் நியூயார்க் புறப்பட்டது. பயணம் தொடங்கிய சமயத்தில் ஒரு சிலருக்கு மட்டும் காய்ச்சல் இருந்துள்ளது. ஆனால் விமானம் அமெரிக்காவை வந்தடைவதற்குள் பல பயணிகளும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைக் கண்டு விமான ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதை தொடர்ந்து நியூயார்க் விமான நிலையத்துக்கு இது குறித்து விமானிகள் தெரியப்படுத்தினர்.

நியூயார்க்கில் விமானம் தரையிறங்கிய பின்பு மருத்துவக் குழுவினர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பயணிகளை சோதனை செய்தனர். அதில், 19 பேருக்கு மர்ம காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அதில் 11 பேர் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், இது தொடர்பான தகவல்களை நியூயார்க் நகரின் சுகாதார கமிஷனர் ஆக்சிரிஸ் பார்பட் மறுத்துள்ளார். சிகிச்சைப் பெற்று வரும் பயணிகள் அனைவரும் நலமாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.