நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு உள்ளது! – வைகோவுக்கு மத்திய அரசு பதில்

 

நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு உள்ளது! – வைகோவுக்கு மத்திய அரசு பதில்

தேனியில் அமைய உள்ள நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த மக்கள் எதிர்ப்பு உள்ளது. இருப்பினும் இது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தேனி மாவட்டத்தில் அமைக்கப்படும் நியூட்ரினோ திட்டம் குறித்து ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அதற்கு பிரதமரின் சார்பில், பொதுமக்கள் குறைதீர்ப்புத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் விளக்கம் அளித்தார். 

தேனியில் அமைய உள்ள நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த மக்கள் எதிர்ப்பு உள்ளது. இருப்பினும் இது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தேனி மாவட்டத்தில் அமைக்கப்படும் நியூட்ரினோ திட்டம் குறித்து ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அதற்கு பிரதமரின் சார்பில், பொதுமக்கள் குறைதீர்ப்புத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் விளக்கம் அளித்தார். 
அப்போது, “தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில், நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க அரசு திட்டம் வகுத்து இருக்கின்றது. இந்தியத் தளத்தில் இருந்து நியூட்ரினோ துகள்களை ஆய்வு செய்யும் திட்டத்தை, (India Based Neutrino-INO) தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் மேற்கொள்ள, அரசு திட்டம் வகுத்து இருக்கின்றது.

neutrino

இந்தத் திட்டத்திற்கு, அந்தப் பகுதியில் உள்ள சில பிரிவு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றார்கள். எனவே, தேனி, மதுரை மாவட்டங்களில், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், செய்தியாளர்கள், தொலைக்காட்சி ஊடகங்களுக்கு, நியூட்ரினோ திட்டம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டு வருகின்றது. கேரளாவிலும் இது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 
நியூட்ரினோ வளாகத்தில் தற்போது இயங்கி வருகின்ற 85 டன் எடை கொண்ட, சிறிய அளவிலான, கேஸ்மிக் கதிர்களைக் கண்டு அறிகின்ற கருவியின் இயக்கம் குறித்து மாணவர்கள், ஆசிரியர்களை அழைத்து வந்து விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அது அங்கே 2 கிலோமீட்டர் ஆழத்துக்கு குடையப்படுகின்ற குகைவழியின் ஒரு முனையில் இடம்பெறக்கூடிய ஒரு சிறிய கருவிதான்.
2010 ஜூன் மாதம்,  தேனி மாவட்ட ஆட்சியர், சுற்றுச்சூழல் மற்றும் காடுகள் துறையின் சார்பில், பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது.

vaiko

அந்தக் கூட்டத்தில், ஊராட்சி மன்றங்களின் தலைவர்கள் உட்ட 1200 பொதுமக்கள் கலந்து கொண்டனர். அவர்கள், நியூட்ரினோ திட்டத்திற்கு ஆதரவு அளித்தனர். நியூட்ரினோ திட்டத்தை நிறைவேற்றுவதற்கான, அனைத்து வகையான சட்டத்தேவைகளும், விதிகளும், நெறிமுறைகளும் பின்பற்றப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டம் அமைகின்ற பகுதி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலத்திற்குள் இடம் பெறவில்லை” என்றார்.