நின்று போன பிரியங்கா சோப்ரா வீட்டு திருமணம்: ‘பிரேக் அப்’ என்று சூசகமாக கூறும் பெற்றோர்!?

 

நின்று போன பிரியங்கா சோப்ரா வீட்டு  திருமணம்: ‘பிரேக் அப்’  என்று சூசகமாக கூறும் பெற்றோர்!?

சித்தார்த் சோப்ரா –   இஷிதா திருமணம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்ட நிலையில் இருவருக்கும்  பிரேக் அப் ஆகிவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

மும்பை:  சித்தார்த் சோப்ரா –   இஷிதா திருமணம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்ட நிலையில் இருவருக்கும்  பிரேக் அப் ஆகிவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

siddarth

பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா தன்னை விட 10 வயது குறைந்த அமெரிக்க பாடகரான நிக் ஜோனஸை கடந்த ஆண்டு திருமணம் முடித்தார்.   கடந்த பிப்ரவரியில்  இவரது தம்பி  சித்தார்த்துக்கும்  அவரின் நீண்ட நாள் காதலி இஷிதா குமாருக்கும் இடையே திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது  இதற்காக இந்தியா வந்த பிரியங்கா சோப்ரா நிச்சயதார்த்தம் முடிந்ததும் மீண்டும் அமெரிக்காவுக்கு பறந்தார். ஆனால்  இவர்களின் திருமணம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. மணமகள் இஷிதாவுக்கு எமர்ஜென்ஸியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்ததால்  திருமணத்தை இரு வீட்டாரும் தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர். இதனால் இந்தியா வந்த பிரியங்கா சோப்ரா மீண்டும் அமெரிக்காவுக்கு பறந்தார். 

 

இந்நிலையில் இஷிதா குமார் சிகிச்சை முடிந்து நலம் பெற்று வரும் நிலையில் தனது இன்ஸ்டராகிராம் பக்கத்தில் தனது புகைப்படம் ஒன்றைத் தட்டிவிட்டுள்ளார்.   அவர் பதிவிட்டுள்ள புகைப்படத்திற்கு அவரது பெற்றோர் கமெண்ட் செய்துள்ளனர். அதில், ‘பழைய புத்தகத்தை  மூடு மற்றும் புதிய கதையை எழுது,  ​​நாங்கள் உன்னோடு  இருக்கிறோம், பிரபஞ்சத்தின் விரிவடைதலை உணர்ந்து கொள்’ என்று பதிவிட்டுள்ளனர். 

insta

இஷிதாவின் பெற்றோரின் இந்த கருத்தால், சித்தார்த் சோப்ரா –   இஷிதா இருவருக்குமிடையே பிரேக் அப் ஆகிவிட்டதாகப் பாலிவுட்டில் முணுமுணுக்கப்படுகிறது. ஆனால்  இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.