நின்று கொண்டிருந்த பேருந்தில் திடீரென பற்றிய தீ.. உள்ளே உறங்கிக் கொண்டிருந்த வாலிபர் உடல் கருகி உயிரிழப்பு!

 

நின்று கொண்டிருந்த பேருந்தில் திடீரென பற்றிய தீ.. உள்ளே உறங்கிக் கொண்டிருந்த வாலிபர் உடல் கருகி உயிரிழப்பு!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள குமுளி அருகே செழிமடை என்னும் பகுதியில் பெட்ரோல் பேங்க் ஒன்று உள்ளது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள குமுளி அருகே செழிமடை என்னும் பகுதியில் பெட்ரோல் பேங்க் ஒன்று உள்ளது. அந்த பெட்ரோல் பேங்க் அருகே, தனியார் பேருந்து ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்துள்ளது. அந்த பேருந்தின் டிரைவர் வெளியே சென்ற நிலையில் கிளீனர் மட்டும் உள்ளேயே படுத்து உறங்கிக் கொண்டிருந்துள்ளார். இன்று அதிகாலை 2 மணிக்கு அந்த பேருந்தில் திடீரென தீப்பற்றி எறிந்துள்ளது. இதனை அறியாமல் கிளீனர் உள்ளேயே இருந்துள்ளார். 

ttn

பேருந்து தீப்பிடித்ததை அறிந்த பொதுமக்கள் மணலைக் கொண்டும், தண்ணீரைக் கொண்டும் அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீ கொழுந்து விட்டு எரிந்ததால், தீயணைப்பு துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்த வீரர்கள், சிறிது நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். தீயணைப்புத் துறையினர் வருவதற்குள் பேருந்தின் உள்ளே உறங்கிக் கொண்டிருந்த கிளீனர் மீதும் தீ பற்றியது என்றும் அதனால் அவரை மீட்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த விபத்தில் கிளீனர் உடல் கருகி உயிரிழந்தார். 

ttn

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற கேரள குமுளி போலீசார் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர் வண்டிப்பெரியார் மிளாமலை பகுதியைச் சேர்ந்த ராஜன் என்றும் பேருந்திலிருந்த மின்கலத்தில் மின்கசிவு ஏற்பட்டதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்றும் தெரியவந்துள்ளது.