நினைத்ததெல்லாம் கொடுக்கும் கல் உப்பு மந்திரம்

 

நினைத்ததெல்லாம் கொடுக்கும் கல் உப்பு மந்திரம்

சாதாரண உப்பு தானே? நம் பிரச்னைகளை எப்படி உப்பைக் கொண்டு தீர்க்க முடியும் என்று நம்பிக்கையில்லாமலேயே நீங்கள் படிப்பது புரிகிறது. இது உங்களுக்கான பக்கம் கிடையாது. நம்பிக்கையுடன் யார் எல்லாம் செய்ய நினைக்கிறீர்களோ அவர்கள் மேற்கொண்டு படித்து உங்கள் பிரச்சினைகளிலிருந்து விடுபடுங்கள்.

சாதாரண உப்பு தானே? நம் பிரச்னைகளை எப்படி உப்பைக் கொண்டு தீர்க்க முடியும் என்று நம்பிக்கையில்லாமலேயே நீங்கள் படிப்பது புரிகிறது. இது உங்களுக்கான பக்கம் கிடையாது. நம்பிக்கையுடன் யார் எல்லாம் செய்ய நினைக்கிறீர்களோ அவர்கள் மேற்கொண்டு படித்து உங்கள் பிரச்சினைகளிலிருந்து விடுபடுங்கள்.

salt

நாம் உணவில் சேர்த்துக் கொள்ளும் உப்பிற்கு அபரிமிதமான சக்தி உள்ளது. பெரியவர்கள், திருஷ்டி சுத்தும் போதும், மந்திரிக்கும் போது உப்பை வைத்து சுற்றிப் போடுவதைப் பார்த்திருப்போம். அதே போல் சில கோயில்களில் பிரச்னைகள் தீர வேண்டும் என்பதற்காக கல் உப்பை வாங்கிக் கொண்டுபோய் கொடிமரத்தின் அருகே போடுவார்கள். நம்முடைய பாவங்கள் தீர வேண்டுமென்பதற்கு ஏன் உப்பு நிறைந்த கடல் நீரில் சென்று குளிக்கிறோம்.. 
பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து, குளித்து கிழக்கு முகமாக உட்கார வேண்டும். உள்ளங்கையில் கல் உப்பை வைத்துக் கொண்டு கைகளை இறுக்கமாக மூடிக் கொள்ள வேண்டும். அதன் பின் உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை மனதிற்குள்ளாகவோ அல்லது வாய்விட்டோ தேவையானவற்றை வெளிப்படையாகச் சொல்ல வேண்டும். பத்து நிமிடங்கள் வரையில் மனதை ஒருமுகப்படுத்திச் சொல்லலாம்.
உதாரணமாக அலுவலகத்தில் மேலதிகாரியுடன் பிரச்சினை என்றால், உப்பை உள்ளங்கையில் வைத்துக் கொண்ட பின், எனக்கும் என் மேலதிகாரிக்கும் எந்த பிரச்னையும் இல்லை. நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம். என் மேலதிகாரி மிகவும் நல்லவர். நான் அவரைப் புரிந்து கொண்டேன். அவருக்கு உண்மையிலேயே என் மீது பாசம் அதிகம் என்று சொல்ல வேண்டும்.
பணப்பிரச்னை இருந்தால், கண்ணைகளை மூடிக்கொண்டு, எனக்கு நிறைய பணம் கிடைக்கும். என்னுடைய கஷ்டங்கள் பனி போல விலகிவிடும் என்று திரும்பத் திரும்ப பத்து நிமிடங்கள் வரை சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டும்.
உடம்பில் ஏதாவது பிரச்னையென்றால், உடம்பில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. நான் மிகுந்த ஆரோக்கியத்துடன் இருக்கிறேன் என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். 
இவ்வாறு உங்களது வேண்டுதல்களைச் சொல்லி முடித்த பிறகு அந்த பிரச்சனை சரியாகிவிட வேண்டுமென்று வாய்விட்டு பத்து நிமிடங்கள் வரை சொல்லி முடித்ததும் கையில் வைத்திருக்கும் உப்பை ஒரு பேப்பரில் போட்டு நன்றாக மடித்து, அதை ஓடும் தண்ணீரில் விட்டுவிட வேண்டும்.
இப்படி செய்தால் பிரச்னைகள் தீர்ந்துவிடுமா என்று நாம் நினைக்கலாம். இது புதிய முறையெல்லாம் கிடையாது. காலங்காலமாக நம்முடைய முன்னோர்கள் பின்பற்றி வந்த முறை தான் உப்பைக் கொண்டு பிரச்னையைப் போக்குவது. இதையெல்லாம் மூட நம்பிக்கை என்று புறம் தள்ளிவிடாதீர்கள். இதற்குள் இருக்கும் அறிவியலை சற்று புரிந்து கொள்ளுங்கள்.

salt

அறிவியலில் இதை ஆரா சயின்ஸ் என்று சொல்வார்கள். எதிர்மறை சக்தி ( Negative energy) நேர்மறை சக்தி (Positive energy) என்ற இரண்டும் தான் நம்முடைய வாழ்க்கையை வழிநடத்திச் செல்கிறது.
உப்பு எதிர்மறை சக்தியை வெளியேற்றும் பொருள். உள்ளங்கைக்குள் உப்பை வைத்துக் கொண்டு நேர்மறையாகப் பேசினால் உடலில் நேர்மறை சக்தி அதிகரிக்கும். நேர்மறை அலைக்கற்றைகள் நம்மைச் சுற்றி பரவ ஆரம்பிக்கும்.
இன்னும் நம்முடைய கிராமங்களில் உப்பை கடன் தரவும் மாட்டார்கள், வாங்கவும் மாட்டார்கள். அப்படி வாங்கினால் உப்பை கொடுப்பவர்களிடம் இருக்கும் எதிர்மறை சக்தி மற்றவர்களிடம் வந்துவிடும் என்ற நம்பிக்கை அவர்களிடம் இருக்கிறது.
குடிப்பதற்கே தண்ணீர் கிடைக்கவில்லை..நீர்நிலைக்கு எங்கே செல்வது என்று புலம்பும் சென்னை போன்ற மாநகரங்களில் வசிப்பவர்கள்  வீட்டின் பின்பக்கம் ஏதாவது மரங்கள் இருந்தால் அந்த மரத்திற்கு நீர் செல்வது மாதிரியான அமைப்பை ஏற்படுத்தி, வீட்டில் உள்ளவர்களை தண்ணீர் விட சொல்லி அந்த நீரில் கரைக்கலாம். நம் பிரச்சினைகளும் உப்பு கரைவதைப் போல அந்த நீரில் கரைந்தோடும்.