நித்யானந்தா எங்கு இருக்கிறார்னு சத்தியமா தெரியல! கண்டுபிடிக்கவும் முடியல- மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்

 

நித்யானந்தா எங்கு இருக்கிறார்னு சத்தியமா தெரியல! கண்டுபிடிக்கவும் முடியல- மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்

புதிய பாஸ்போர்ட் கேட்டு நித்யானந்தா தரப்பில் தாக்கல் செய்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

புதிய பாஸ்போர்ட் கேட்டு நித்யானந்தா தரப்பில் தாக்கல் செய்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார், நித்தியானந்தா பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வருகிறார். புதிய பாஸ்போர்ட் கேட்டு நித்யானந்தா தரப்பில் தாக்கல் செய்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. நித்தியானந்தா எங்கு இருக்கிறார் என்பதை அறிவதில் சிரமம் இருக்கிறது.  

நித்யானந்தா

நித்தியானந்தா வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றிருந்தால் தூர்தரகம் மூலம் அவரை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும். ஆனால் அவர் ஈகுவடாரில் இல்லை என அந்நாட்டு இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. பாலியல் வன்கொடுமை புகார், சிறுமிகளை சித்திரவதை செய்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நித்தியானந்தா மீது இருக்கின்றன