நித்தியானந்தா  மீது புதிய புகார்! சிறுவர் சிறுமிகளை டார்ச்சர் செய்தது அம்பலம்!!

 

நித்தியானந்தா  மீது புதிய புகார்! சிறுவர் சிறுமிகளை டார்ச்சர் செய்தது அம்பலம்!!

நித்தியானந்தாவிடம் சிஷ்யையாக சேர்ந்து பிடதி ஆசிரமத்தில் தங்கி இருந்த கனடா நாட்டை சேர்ந்த இளம் பெண் ஒருவர்,  நித்தியானந்தா, அவருடைய குருகுலத்திலுள்ள சிறுவர் சிறுமிகளை பாலியன் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக குற்றஞ்சாட்டியுள்ளார். 

கனடா நாட்டில் இருந்து சாரா லேண்ட்ரி என்பவர், கர்நாடக மாநிலத்திலுள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் ருத்ரகன்னியாக துறவு பூண்டுள்ளார். துறவறம் ஏற்றுக்கொண்ட பிறகு அவருடைய பெயர், ஸ்ரீ நித்தியா ஸ்வரூப்ப பிரியானந்தா..! என மாற்றப்பட்டது. 

திருவனந்தபுரத்தில் உள்ள குருகுலத்தில் உள்ள சிறுவர், சிறுமியர்களுக்கு சமூக வலைதளங்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து தன்னை பயிற்சி அளிக்க சொன்னதாக சாரா தெரிவிக்கிறார். அப்போது அந்த சிறுமிகளிடம் விசாரித்தபோதுதான் ஆசிரமத்தில் நடக்கும் கொடுமைகள் தெரியவந்ததாக சாரா கூறுகிறார். 

நித்தி

ஆசிரமத்திலிருக்கும் சிறுவர், சிறுமிகளை குருகுல ஆசிரியர்கள் குச்சியால் அடித்து கொடுமை படுத்துவதாகவும், இயற்கை உபாதைகள் கூட செல்ல அனுமதிக்கவில்லை என்றும் பாதிக்கப்பட்ட சிறுவர், சிறுமிகள் கூறியிருந்தனர். அதுமட்டுமின்றி ஒருவருக்கு ஒருவர் பேசக்கூடாது என்றும், கடுமையான தண்டனை வழங்கபட்டதாக தெரிவித்தார். அந்த சிறுவர் சிறுமிகள் கூறிய பிறகுதான் அங்கு நடப்பது எல்லாமே பொய் என உணர்ந்ததாகவும், தற்போது கனடாவுக்கே திரும்பி இயல்பு வாழ்க்கை நடத்துவதாகவும் சாரா தெரிவித்திருக்கிறார்.