நித்தியானந்தா நீ வேர் அறுக்கப்படுவாய்! ஆவேசமாக சாபம் விடும் சர்மாவின் மனைவி

 

நித்தியானந்தா நீ வேர் அறுக்கப்படுவாய்! ஆவேசமாக சாபம் விடும் சர்மாவின் மனைவி

சிறுமிகள் கடத்தல், பாலியல் அத்துமீறல் உள்ளிட்ட வழக்குகளில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர் பிரபல சாமியார் நித்தியானந்தா. இவர் கரீபியன் தீவுகள் பகுதியில் ஒரு சிறிய தீவை விலைக்கு வாங்கி, அதை கைலாசம் என்ற தனிநாடாக அறிவிக்கப்போவதாக கதைவிட்டார். இதற்காக தனி இணையதளம் தொடங்கப்பட்டது. லட்சக் கணக்கான மக்கள் குடியுரிமை கோரி விண்ணப்பித்ததாகவும் செய்திகள் வெளியாகின. இதை நம்பி தனக்கு பதவி எல்லாம் வேண்டும் என்று எஸ்.வி.சேகர் உள்ளிட்டவர்கள் வீடியோ வெளியிட்டனர். ஆனால், தனித் தீவு எல்லாம் வாங்கவில்லை என்றும் அகதியாகக் கூட அவரை ஏற்க முடியாது என்றும் சில நாடுகள் தெரிவித்தன. சர்வதேச போலீசாரல் தேடப்பட்டுவரும் நித்தியானந்தா, தொடர்ந்து யூடியூபில் சத்சங்கம் நிகழ்ச்சியில் உரையாற்றிவருகிறார். 

nithyananda

தன்னுடைய இரு மகள்களான லோபமுத்ரா (21), நித்யநந்திதா (18) ஆகியோர் நாடு கடத்தப்பட்டதாக நித்தியானந்தாவுடைய முன்னாள் செயலாளர் ஜனார்த்தன் சர்மா குஜராத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, நித்தியானந்தாவிற்கு காவல்துறையினர் வலை வீசிவருகின்றனர். இதற்கிடையில் தாங்கள் நித்தியானந்தாவால் கடத்தப்படவில்லை, அவரால் எங்களுக்கு பாதிப்பும் இல்லை. பெற்றோர்கள் நித்தியானந்தா மீது அவதூறு பரப்பிவருகின்றனர் என அண்மையில் ஜனார்த்தன் சர்மா மகள்கள் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டிருந்தனர்.

nithyananda

இந்நிலையில் சர்மாவின் மனைவி புவனேஸ்வரி வெளியிட்டுள்ள வீடியோவில், “தங்கள் மகள்களை வைத்தே தங்கள் குடும்பத்தை நித்யானந்தா இழிவுபடுத்தி  வருகிறார். தங்கள் மகள்கள் அவதுாறு பரப்பினால் மகள் என்றும் பாராமல் மான நஷ்ட வழக்குப் போடுவேன். நித்தியானந்தா பல பெண்களை கொன்றிருக்கிறார். பொய் சன்னியாசியான உனது சாபமே பலிக்கும்போது, என் சாபமும் பலிக்கும். உன்னை போல நானும் சாபம் விடுகிறேன். அது எப்படி பலிக்கப்போகிறது என உலகமே பார்க்கப்போகிறது. உலகின் எந்த மூலையில் இருந்தாலும் எனது சாபம் நித்தியானந்தாவை தாக்கும். பெண்களுக்கு பின்னால் ஓடி ஒளியாமல் தங்களைப் போல நேரடியாக வந்து நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். நித்தியானந்தா நீ வேர் அறுக்கப்படுவாய்” என கூறியுள்ளார்.