நித்தியானந்தா சீடர் தூக்கிட்டு தற்கொலை! 

 

நித்தியானந்தா சீடர் தூக்கிட்டு தற்கொலை! 

சேலம் தலைவாசலை அருகே நித்தியானந்தாவின் சீடர் வீரபத்ரானந்தா என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

நித்தியானந்தா மீது பணமோசடி, பாலியல் புகார்கள் மற்றும் ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில், குஜராத்தில் நித்தியானந்தா நடத்தி வந்த ஆசிரமம் மூடப்பட்டு அனைவரும் வெளியேற்றப்பட்டனர். காவல்துறைக்கு தண்ணீர் காட்டி வரும் நித்தியானந்தா அடிக்கடி யூடியூபில் வீடியோ பதிவேற்றம் செய்து வருகிறார்.அவரை கடந்த ஆண்டே கைது செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தும் அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை. 

நித்தியானந்தா  சீடர்

ஆறகளுர் பகுதியை சேர்ந்த வீரபத்ரானந்தா, சென்னைக்கு சென்றிருந்தார். சென்னையில் இருந்து வீடு திரும்பியவுடன் அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாராணை மேற்கொண்டனர். முதல்கட்ட விசாரணையில் காதல் விவகாரத்தில் வீரபத்ரானந்தா தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நித்தியானந்தா ஆசரமத்தில் தங்கியிருந்த இவரது உண்மையான பெயர் தினேஷ். ஆசிரமத்தில் இருக்கும்போது நித்தியானந்தா இவருக்கு வீரபத்ரானந்தா  என பெயர் வைத்துள்ளார்.