நித்தியானந்தா கெட்டவார்த்தை சொல்லிக்கொடுத்து வைரமுத்துவை திட்ட சொன்னார்: பாதிக்கப்பட்ட சிறுமி பகீர் தகவல்!
யார் ஜனார்த்தனா ஷர்மா? என்று பார்த்தோமேயானால் அவர் நித்தியானந்தாவின் தனிப்பட்ட செயலர்களில் ஒருவராக செல்வாக்கு மிகுந்தவராக வலம்வந்தவர்
நித்தியானந்தா மீது பெண்கள் பலரும் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறி புகார் கொடுத்து வருகின்றனர். அந்த வரிசையில் பெங்களூரைச் சேர்ந்த ஜனார்த்தனா ஷர்மா என்பவர், நித்தியானந்தா ஆசிரமத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தங்களது இரு மகள்களை மீட்டுத் தருமாறு குஜராத் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். ஆனால் அவரது மகள் நந்திதாவோ, எங்களை யாரும் கடத்தவில்லை. விருப்பப்பட்டு தான் அங்கு இருக்கிறேன்’ என்று கூறி பரபரப்பை கிளப்பினார். இந்த விவகாரத்தில் ப்ராணப் பிரியா, பிரிய தத்துவா என்ற ஆசிரம நிர்வாகிகளை 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர்.
யார் ஜனார்த்தனா ஷர்மா? என்று பார்த்தோமேயானால் அவர் நித்தியானந்தாவின் தனிப்பட்ட செயலர்களில் ஒருவராக செல்வாக்கு மிகுந்தவராக வலம்வந்தவர் தான். தற்போது அவராலையே பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ஆசிரமத்திலிருந்து மீட்கப்பட்ட ஜனார்த்தனா ஷர்மாவின் இளையமகள் பிரபல தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக கெட்டவார்த்தை சொல்லிக்கொடுத்து தங்களை பேசவைத்ததாகக் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். கடந்த ஜனவரி மாதம் ராஜபாளையத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வைரமுத்து ஆண்டாள் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கினார். அப்போது நித்தியானந்தாவின் சிஷ்யைகள் என்று கூறிக்கொண்டு, சிறுமிகள் சிலர் அவரை ஆபாசமாக பேசி வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டனர். தற்போது சிறுமி வைரமுத்து விவகாரம் குறித்து வாய்திறந்துள்ளது சர்ச்சையை உண்டாக்கியது.