நித்தியானந்தா குறிவைக்கும் அடுத்த ஆதினத்தின் கதை!

 

நித்தியானந்தா குறிவைக்கும் அடுத்த ஆதினத்தின் கதை!

நெட் ஃபிலிக்ஸ்,எம்.எஸ்.பிளேயரை எல்லாம் விட சமீப காலமாக அதிக வீடியோக்களை இறக்குவது தலைவன் நித்யானந்தா மட்டும்தான்.அப்படிசமீபத்தில் வெளியிட்ட  வீடியோ ஒன்றில்,மோடிக்கு பொருளாதார யோசனை,ராவணன் ஏன் முட்டாள்,மீம்ஸை சமாளிப்பது எப்படி என்றெல்லாம் சொல்லிவிட்டு எனது அடுத்த இலக்கு இலங்கையில் இருக்கும் ‘ நல்லை ஆதீனம்’ என்று சொல்லி இருக்கிறார்.

நெட் ஃபிலிக்ஸ்,எம்.எஸ்.பிளேயரை எல்லாம் விட சமீப காலமாக அதிக வீடியோக்களை இறக்குவது தலைவன் நித்யானந்தா மட்டும்தான்.அப்படிசமீபத்தில் வெளியிட்ட  வீடியோ ஒன்றில்,மோடிக்கு பொருளாதார யோசனை,ராவணன் ஏன் முட்டாள்,மீம்ஸை சமாளிப்பது எப்படி என்றெல்லாம் சொல்லிவிட்டு எனது அடுத்த இலக்கு இலங்கையில் இருக்கும் ‘ நல்லை ஆதீனம்’ என்று சொல்லி இருக்கிறார்.

nithyananda

நல்லை ஆத்தீனம் என்பது இலங்கை நல்லூர் கந்தசுவாமி கோவிலின் மேற்கில்,யாழ்பாணம், பருத்தித்துறை வீதியில் இருக்கும்,இதுதான் இலங்கையில் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரே சைவ ஆதீனம்.
1966-ல் இந்த ஆதீனம் நிறுவப்பட்டது.நிறுவியவர் முதல் குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சுவாமிநாத தேசிக ஞானசம்பந்த பரமாச்சரிய சுவாமிகள்.
இவர் வடக்கிலங்கை முழுவதும் சுற்றி கதாபிரசங்கம் செய்து, அதில் காணிக்கையாக வந்த வருமானத்தில் அவர் தனி ஒருவராகக் கட்டி எழுப்பிய மடம் இது.

nellai

இந்தியாவில் இருப்பதுபோல இலங்கையிலும் ஒரு சைவ ஆதீனம் இருக்க வேண்டும் என விரும்பி அவர் உருவாக்கியது இந்த நல்லூர் ஆதீனம்.அவர் காலத்திலேயே தனக்கு அடுத்த ஆதீனகர்த்தராக ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியாரை இரண்டாவது குருமகா சன்னிதானமாக அவர் காலத்திலேயே நியமித்து விட்டார்.அப்படி இருக்கும் போது இந்த ஆதீனத்தை நித்யானந்தா குறிவைப்பது ஏன்.ஆயிரமாண்டு பழைமையான மதுரை ஆதீனத்தைப் போன்ற பெரிய சொத்துக்கள் உள்ள ஆதீனமும் இல்லை.இப்படி இருக்கும் போது நித்யானந்தா நல்லை ஆதீனத்தைக் குறிவைப்பது ஏன் என்ற பரபரப்பு எழுந்துள்ளது.

nallai

இதுகுறித்து நல்லை ஆதீனம் ‘ எமக்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.உண்மையிலேயே அவர் அப்பச் சொன்னாரா,இல்லை இடையில் யாராவது பரபரப்புக்காக எதேனும் செய்தார்களா,என்று ஆராய வேண்டும்’ என்று சொன்னதாக இலங்கைப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு இருக்கின்றன.