நித்தியானந்தாவைக் கைது செய்வதில் சட்டச் சிக்கல்.. திணறும் கர்நாடக காவல்துறை !

 

நித்தியானந்தாவைக் கைது செய்வதில் சட்டச் சிக்கல்.. திணறும் கர்நாடக காவல்துறை !

காவல்துறைக்கு தண்ணி காட்டி வரும் நித்தியானந்தா அடிக்கடி யூடியூபில் வீடியோ பதிவேற்றம் செய்து வருகிறார்.

நித்தியானந்தா மீது பணமோசடி, பாலியல் புகார்கள் மற்றும் ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில், குஜராத்தில் நித்தியானந்தா நடத்தி வந்த ஆசிரமம் மூடப்பட்டு அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அதுமட்டுமில்லாமல்,ஆசிரம நிர்வாகிகள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.காவல்துறைக்கு தண்ணி காட்டி வரும் நித்தியானந்தா அடிக்கடி யூடியூபில் வீடியோ பதிவேற்றம் செய்து வருகிறார்.

ttn

அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் 18 ஆம் தேதிக்குள் ஆஜர் படுத்த வேண்டும் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் கர்நாடக காவல்துறைக்கு உத்தரவிட்டது. ஆனால், காலக்கெடு முடிந்து இன்றோடு இரண்டு நாட்கள் ஆகியும் நித்தியானந்தா இன்னும் கைது செய்யப்படவில்லை. 

ttn

இது குறித்துப் பேசிய கர்நாடக காவல்துறையினர், நித்தியானந்தாவைக் கைது செய்வதில் பல சட்ட சிக்கல்கள் உள்ளதால் தான் சிபிஐ உதவியை நாடியுள்ளோம். நித்தியானந்தாவை வலைவீசித் தேடி வருகிறோம். அவரை கைது செய்யாததால் வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. அதனால், அது குறித்த தகவல்கள் ஏதும் தெரிவிக்க முடியாது என்று தெரிவித்துள்ளனர்.