நித்தியானந்தாவுக்கு சில நேரம் பெண் சுகமும், சில நேரம் ஆண் சுகமும் தேவை! வெளியான பகீர் தகவல்

 

நித்தியானந்தாவுக்கு சில நேரம் பெண் சுகமும், சில நேரம் ஆண் சுகமும் தேவை! வெளியான பகீர் தகவல்

சர்ச்சை சாமியார் நித்தியானந்தா ஆசிரமத்திலுள்ள ஆண்களுக்கு ஒரு பெண்ணாகவும், பெண்களுக்கு ஆணாகவும் இருப்பார் என அவரது சீடர் கூறியுள்ளார். 

சர்ச்சை சாமியார் நித்தியானந்தா ஆசிரமத்திலுள்ள ஆண்களுக்கு ஒரு பெண்ணாகவும், பெண்களுக்கு ஆணாகவும் இருப்பார் என அவரது சீடர் கூறியுள்ளார். 

நித்தியானந்தா மீது பணமோசடி, பாலியல் புகார்கள் மற்றும் ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில், குஜராத்தில் நித்தியானந்தா நடத்தி வந்த ஆசிரமம் மூடப்பட்டு அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அதுமட்டுமில்லாமல்,ஆசிரம நிர்வாகிகள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.காவல்துறைக்கு தண்ணி காட்டி வரும் நித்தியானந்தா அடிக்கடி யூடியூபில் வீடியோ பதிவேற்றம் செய்து வருகிறார்.அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் 18 ஆம் தேதிக்குள் ஆஜர் படுத்த வேண்டும் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் கர்நாடக காவல்துறைக்கு உத்தரவிட்டது. ஆனால், காலக்கெடு முடிந்தும் நித்தியானந்தாவை காவல்துறையினரால் பிடிக்க முடியவில்லை.

nithyananda

இந்நிலையில் நித்தியானந்தாவின் ஆசிரமத்திலிருந்து தப்பிவந்த சீடர் விஜய் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், காதலர் தினத்தன்று நித்தியானந்தாவுக்கு ஆசிரமத்திலுள்ள பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் ரோஜாப்பூ கொடுக்க வேண்டும். அவர் சில ஆண் துணையை விரும்புவார், சில நேரம் பெண் துணையை விரும்புவார். ஆண்களுக்கு ஒரு பெண்ணாகவும், பெண்களுக்கு ஆணாகவும் இருப்பார்.

nithyananda

அசிரமத்தில் நிலவும் அமைதியான சூழல், நித்தியானந்தாவின் பார்வை மற்றும் அவரது பேச்சு ஆசிரமத்தில் நுழையும் அனைவரையும் கட்டிப்போட்டுவிடும். நித்தியானந்தா ஆணும் இல்லை. பெண்ணும் இல்லை. அவருக்கு இருதரப்பினர் மீதும் இச்சை உண்டு.  அவரால் ஆணிடமும், பெண்ணிடமும் சமமாக உறவு வைத்துக்கொள்ள முடியும் என்ற மருத்துவ சான்றிதழும் உண்டு” என தெரிவித்தார்.