‘நித்தியானந்தாவிடமிருந்து மீட்கப்பட்ட மருத்துவர் மீண்டும் மாயம்’ : நித்தியிடம் தஞ்சம் புகுந்தாரா என தீவிர விசாரணை!

 

‘நித்தியானந்தாவிடமிருந்து மீட்கப்பட்ட மருத்துவர் மீண்டும் மாயம்’ : நித்தியிடம் தஞ்சம் புகுந்தாரா என தீவிர விசாரணை!

அதையடுத்து காவல் துறையினர் தனிப்படை அமைத்து பிடாடி ஆசிரமத்திற்குச் சென்று இருவரையும் மீட்டு வந்தனர்.

தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற மருந்து ஆளுநரான காந்தியின் மகன் மனோஜ்குமார். 33 வயதான இவர், மதுரை மாவட்டம் வெள்ளளூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராகப் பணிபுரிந்து வந்தார். இதையடுத்து மனோஜ் குமார் 2018 ஆண்டு திடீரென தனது அக்கா மகள் நிவேதாவுடன் காணாமல் போயுள்ளார்.

ttn

நித்தியானந்தாவால் ஈர்க்கப்பட்ட மனோஜ் குமார், அவரது அக்கா மகளுடன் திருவண்ணாமலையில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் இருப்பதாகத் தகவல் வந்துள்ளது. அங்கு சென்று மனோஜின் தந்தை பார்த்த போது  அவர்கள் பிடதி ஆசிரமத்தில் இருப்பது தெரியவந்தது. அங்கு சென்ற போது  ஆசிரம நிர்வாகிகள் அவர்களை உள்ளே விட அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனோஜ் குமார் குடும்பத்தினர் அங்கு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து பெரியகுளம் வடகரை காவல் நிலையத்தில் காந்தி, தனது மகன் மற்றும் பேத்தியை மீட்டுத் தரவேண்டும் எனப் புகார் அளித்தார். அதையடுத்து காவல் துறையினர் தனிப்படை அமைத்து பிடதி ஆசிரமத்திற்குச் சென்று இருவரையும் மீட்டு வந்தனர்.

tn

இந்நிலையில் மருத்துவர் மனோஜ்குமார் தேனி மாவட்டம் தேவாரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில்  பணியாற்றி வந்தார். ஆனால் அவர் தற்போது மீண்டும் மனோஜ் குமார்  காணாமல் போயுள்ளார். இதுகுறித்து பெரியகுளம் வடகரை காவல் நிலையத்தில் காந்தி  மகனை காணவில்லை என்று புகார் கூறியுள்ளார்.  புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து மனோஜ் குமாரை தேடி வருகின்றனர். 

ttn

ஏற்கனவே தலைமறைவாகியுள்ள நித்தியானந்தாவை பிடிக்க போலீஸ்  தீவிரம் காட்டியுள்ள நிலையில் மனோஜ் குமார் நித்தியானந்தா அல்லது அவரது கும்பலிடம்  மீண்டும் தஞ்சம் புகுந்து விட்டாரா என்பது விரைவில் தெரிய வரும்.