நிதி நெருக்கடி: 200 கோடி டாலர்கள் ஏல முறையில் கைம்மாற்றம் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு

 

நிதி நெருக்கடி: 200 கோடி டாலர்கள் ஏல முறையில் கைம்மாற்றம் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு

200 கோடி அமெரிக்க டாலர்களை ஏல முறையில் கைம்மாற்றம் செய்ய ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

டெல்லி: 200 கோடி அமெரிக்க டாலர்களை ஏல முறையில் கைம்மாற்றம் செய்ய ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நிதி நெருக்கடியைச் சமாளிக்கும் நோக்கில் 200 கோடி அமெரிக்க டாலர்களை ஏல முறையில் கைம்மாற்றம் செய்ய ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மார்ச் 16-ஆம் தேதி காலை 9:30 மணி முதல் 11:00 மணி வரை ஏலம் நடைபெற உள்ளது. பதிவு பெற்ற முகவர்கள், வங்கிகள் ஏலத்தில் பங்கேற்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. குறைந்தது ஒரு கோடி அமெரிக்க டாலர் வீதம் அதன் மடங்குகளில் ஏலம் கேட்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ttn

மேலும் ஏலத்தில் கேட்டுப் பெறும் டாலர்களை 6 மாதங்களில் திருப்பிச் செலுத்த வேண்டும். அதிகமாக பிரீமியம் தர ஒப்புக் கொள்பவர்களுக்கு அமெரிக்க டாலர்கள் கைம்மாற்றப்படும். மார்ச் 18-ஆம் தேதி அமெரிக்க டாலர்களை பெறுபவர்கள் செப்டம்பர் 18-ஆம் தேதி அதே அளவு டாலர்களைத் ரிசர்வ் வங்கிக்கு திரும்ப அளிக்க வேண்டும். எந்த நெருக்கடி சூழலையும் எதிர்கொள்ளும் வகையில் சுமார் 48 ஆயிரத்து 724 கோடி அமெரிக்க டாலர் அந்நியச் செலாவணி கையிருப்பில் உள்ளதாக ரிசர்வ் வங்கி தரப்பில் கூறப்பட்டுள்ளது.